கூடாதுனு நினைக்கறேன்."
"வீடு தேடி வந்துட்டோம்னு ரொம்ப அலட்டிக்கறாங்கப்பா" ரஞ்சன் சொல்ல,
"அலட்றோமா… சில்லி… ரேச்சல் இனி நாம் யாரிடமும் பேச தேவையில்லை. வா போகலாம்." என்று ஜெமி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.
அச்சோ… நாம நினைச்சபடி ஆயிடுச்சே என்று கலங்கிய நந்தினி,
"என்ன ரஞ்சன் இப்படி பண்ணிட்டீங்க?" ஆயாசமாக சொன்னாள்.
"ஹே நான் என்னம்மா செஞ்சேன். ரேச்சல் கோபப்பட்டு கிட்டு போயிட்டாள்… தட்ஸ் ஆல்… வா போகலாம்"என்று சத்யனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு சென்று விட்டான்.
வீட்டிற்குள் செல்லவும் தன்னுடைய அறைக்கு சத்யன் சென்று விட்டான். அவனுக்கு நடந்த அத்தனையும் குழப்பமாக இருந்தது. ரஞ்சன் ஏன் அப்படி நடந்தான்? இதுபற்றி தனிமையில் யோசிக்க வேண்டும் என்று சென்று விட்டான்.
சத்யன் தன்னுடைய அறைக்கு சென்றதுமே நடுகூடத்திலேய நந்தினி ரஞ்சனிடம் சண்டையிட ஆரம்பித்தாள்.
" எனக்கு நல்லா புரியுது. நீங்க வேணும்தான் இப்படி செஞ்சிங்க. ரேச்சலும் அண்ணனும் சமாதானமாயுட கூடாதுன்னு நினைச்சு நீங்க நடந்துகிட்டீங்க. ஏன் இப்படி செய்தீர்கள்?' என்று கத்தினாள்.
"கொஞ்சம் பொறுமையா இரு நந்து… நான் காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டேன் உனக்கு தெரியும்ல."
" அப்படி என்ன காரணமாம்?. நான் எங்க அண்ணனுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு இதை நல்லபடியாக முடிக்கணும் நினைக்கிறேன். அதை கெடுத்திட்டு அதுக்கு ஒரு காரணம் சொல்றீங்களா?"
"ஆமாம்.. நான் சொல்றத கவனமா கேளு. ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக நாங்க மருத்துவமனைக்கு சென்றோம். மீரா யாருடைய முகமாற்று அறுவை சிகிச்சைக்கு டோனர் ஆகயிருந்தாள் அப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு போணோம். மீராவுடைய ரிப்போர்டை ஸ்டோர் ரூமில் இருந்து நாங்க எடுத்து பார்த்துட்டோம். அதில் ரேச்சல் என்று இருந்தது. அது வேறு யாரோ ரேச்சல் என்று நம்பினோம். அதுக்கப்புறம் சத்தியன் மீராவுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை படிக்க ஆரம்பிச்சான். நான்தான் ரேச்சல் கேஸ் ஹிஸ்டரியை முழுமையாக படிக்க ஆரம்பிச்சேன்."
"நீங்க ரேச்சல்னு சொல்றது நம்முடைய ரேச்சலைதானா?" என்று நந்தினி ஆர்வமாகக் கேட்டாள்.