உறுதியாயிடுச்சு. என்னுடைய மீரா உயிருடன் இல்லை…. இத்தனை நாட்கள் நான் தேடிய என்னுடைய உயிர் இப்போது இந்த உலகத்தில் இல்லை." அலனுக்கு குரல் தளுதளுக்க ஆரம்பித்தது.
"சாரி… சாரி… சத்தி" அவனை ரஞ்சன் தோளில் சாய்த்து சமாதானம் சொல்ல முயன்றான்.
"இந்த உலகத்தில் மீரா எங்கேயாவது வாழ்ந்து கொண்டு இருப்பாள் என்று நம்பிக் கொண்டு இருந்தேன். அவளுடைய ஃபைலை படித்தபோதுகூட நம்பவில்லை. மீராதான் இறந்திருக்க வேண்டும் என்பதை என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை… ஆனால் ரேச்சலிடம் மீராவின் தோற்றம் தெரிவதை பார்க்கும்போது அதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். மீரா உயிருடன் இல்லை… " ரஞ்சன் தோளில் தலை சாய்த்து இருந்தவன் உடல் குலுங்கியது.
ரஞ்னும் நந்தினியும் கண் கலங்க நின்றனர். நீண்ட நாட்களாக தேடிய விடை கிடைத்து விட்டது. அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும். அப்போதுதான் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும். மனம் விட்டு அழுவது முதல் நிலை… கொஞ்ச நாள் சோகமாக இருப்பான்… பிறகு இந்த வாழ்வின் நிதர்சனம் புரிந்து விடும்… யதார்த்தமாகி விடுவான். இதுதான் ரஞ்சனின் எண்ணமாக இருந்தது.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே… இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சத்யன் ஒரு நல்ல தந்தையாக மனுகுட்டியின் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவான். அதுவயை காத்திருக்க வேண்டும்….
மருத்துவர் பரிந்துரைத்திருந்த ட்ராங்குவிலேசர் மருந்தை தந்து சத்யனை அமைதியாக உறங்க வைத்தான். நந்தினிடம்,
"இப்போது நாம் ரேச்சலைபற்றி கவலைபடுவதை நிறுத்திவிட்ஞு சத்யனுக்காக யோசிக்க வேண்டும். நாம் நம்முடைய வீட்டுக்கு சென்று விடுவது நல்லது என்று தோன்றுகிறது." என்றான்.
அதை மறுத்து தலையசைத்த நந்தினியிடம்…
"மறுத்து பேசாதே… நான் சொல்வதை மட்டும் செய். சத்யனுக்கு நாம்தான் துணையாக இருக்க வேண்டும்." என்று தீர்மானமாக சொன்னான்.
ரேச்சல்தான் மீரா என்று யோசிக்காமல் ரஞ்சன் திட்டமிட… ஜெமிக்கு மீராவை தேடும் முயறசியில் தொய்வு.. அட… இப்படியே சத்யன் ரேச்சல் இருவரும் விலகி சென்று விடுவார்களா…
ம்… இப்படித்தான் வாழ்க்கை ஒரு.முட்டு சந்தில் மாட்டி கொண்டது என்று நாம் நினைக்கும்போது திடீரென்று விதி தன்னுடைய வேலையை காட்டி புதிய மாற்றத்தை கொண்டு வரும். முற்றுபுள்ளி கமாவாகி வாழ்க்கை தொடரும்.