ஆயிடுவான்னு நினைச்சேன்."
"மை காட்… நீங்க விஷயத்தை தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க… உண்மையில் நடந்தது என்னவென்றால்" என்று ஆரம்பித்த ஜெமி அனைத்தையும் விளக்கி மேத்யூஸ் பேசியிருந்த ஆடியோவையும் ஆதாரமாக காட்டினான்.
"நீங்க என்ன சொல்றீங்க ஜெமி. என்னால நம்பவே முடியலை. ரேச்சல்தான் மீராவா?. இதை ஏன் எங்களால் உணர்ந்து கொள்ள முடியாம போயிடுச்சு. மீரா உயிருடன்தான் இருக்கிறாள். நன்றி இறைவா" என்று பதட்டமான ரஞ்சன், உடனேயே இதை அனைவருக்கும் தெரிவித்தாக வேண்டும் என்று அவனை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றான்.
சத்யன் சரியான நேரத்திற்கு மதுரைக்கு சென்று டெல்லி செல்லும் விமானத்தில் ஏறினான். டொமஸ்டிக் விமானம் என்பதால் விமானம் நிரம்பி இருந்தது. அவனுடைய இருக்க ஜன்னல் அருகில் இருந்தது அவன் தன்னுடைய இருக்கையில் அமர்ந்த பின்புதான் கவனித்தான்… சுற்றுலா பயணிகள் நிரம்பி இருந்தனர். அனைவரும் பேசாக் கொண்டு… சிரித்துக் கொண்டு விமானத்தை கலகலப்பாக்கினர்.
சத்யனால் அதை இரைச்சலாகவே உணர முடிந்தது. அவனிடம் வந்த பணிப்பெண்ணிடம் ப்ளாக் காபிக்கு ஆர்டர் தந்துவிட்டு, அவனுடைய இருக்கைக்கு முன் இருந்த ஒளித்திரையை ஆன் செய்தான்.
அதில் ஒரு டாக் ஷோ ஓடி கொண்டு இருந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் மற்றும் அவருடன் விருந்தினராக பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு முன்பாக சில மாணவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்து இருந்தனர். அந்த ஒரு பேராசிரியர் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னார். நாம் ஒரு விஷயத்தை தெளிவாக கற்று கொள்ள கூர்மையாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அடிப்படையாக கொண்டு நிறைய நுணுக்கங்களை புரிந்து கொள்ள முடியும்.அதற்காக ஒரு டெமோ செய்யப் போவதாக சொன்னார்.
'இன்ட்ரஸ்டிங்..' என்றபடி சத்யன் கவனிக்க ஆரம்பித்தான்.
பார்வையாளர்களில் இருந்து ஐந்து பேரை வரச் சொன்னார். அவர்களிடம் நோட் பேட்களை தந்து குறிப்பெடுக்க சொன்னார்.
"இப்போது நான் டெமோ செய்கிறேன். அதை பார்த்து நீங்களும் செய்து குறிப்பெடுங்கள் " என்றார்.
முதலில் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வந்தது. அதனை ஒரு விரலால் தொட்டு சுவைத்து அதனைபற்றி குறிப்பெழுதினார். அதையே ஐவரையும் செய்ய சொன்னார்.
அவர்களுடைய குறிப்புகளை வாசிக்க சொன்னார். அவர்கள்,