நினைத்தேன். அவளுக்கு குணமானபின் அவளுடைய கணவன் அவளை ஏற்றுக் கொள்ள வரும்போது உன் பெயர் அதில் அடிபடக்கூடாது என்று நினைத்தேன."
"ஓ… மனைவியை கஷ்டமான நேரத்தில் விட்டு ஓடிப் போனவனை நினைத்து என்னை தடுத்திருக்கிறாய். சூப்பர்… அதை மறைத்தும் இருக்கிறாய்… இன்னும் என்ன பாக்கி இருக்கிறது ரஞ்சன்…"
"சாரிண்ணா… இந்த குழப்பத்திற்கு நான்தான் காரணம்" நந்தினி அவன் முன்னே வந்து நின்றாள்.
"மனுவிற்காகவாவது ரேச்சலும் நீங்களும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று நான்தான் மும்முரமாக இருந்தேன். ரேச்சல் சமாதானமாகி பழையபடி உங்களுடன் பழகும்போது…."
"மேடம் குறுக்க வந்து சென்டிமென்ட் பேசி இரண்டு பேரையும் சேர்த்து வச்சிடுவீங்கனு அவன் பயந்துட்டான்…"
"இருக்கலாம்… எனக்கு ரேச்சலின் கணவன் பற்றிய கவலை இல்லை. மெண்டல்னு சொல்லி மனைவியை விட்டுட்டு போனவன் இந்நேரம் வேறு யாரையாவது கல்யாணம்கூட செய்து இருப்பான்... " என்று நந்தினி சொல்ல,
"அப்படி சொல்லகூடாது நந்து. அவன் தனியாகவே இருக்கலாம். ஒருவேளை மனம் மாறி திரும்பி வரவும் செய்யலாம். அப்போது ரேச்சலுக்கு எது நல்லது…"
"யார்னே தெரியாதவனை சப்போர்ட் செய்யறீங்க. நீங்க ரொம்ப ஓல்ட் மாடல் மூளையை வச்சிருக்கீங்க… "
"சமுதாயமே ஓல்டாகதானே இருக்கு.. ரேச்சலுடைய கணவனையும் சத்யனையும் தராசு தட்டில் நிறுத்தி வைத்தால் முள் சத்யன் பக்கம் தாழாது… "
"ப்ச்… நாம் ஷீலா மேடம்கிட்ட பேசி இதை தெளிவு செய்திருக்கலாம்… அந்த எக்ஸ்பற்றி தெரிஞ்சுகிட்டால்…" அவள் சொல்லும்போதே கார் கிளம்பும் ஓசை கேட்டது.
"அவன் எப்பவோ கிளம்பிட்டான் போல… நீ ஆர்க்யூமென்டை இத்தோட நிறுத்து நந்து. சத்யனை கன்சிடர் பண்ணாமல் நாம் பேசியது தவறு…. நான் அலுவலகத்திற்கு கிளம்பறேன்." என்று கடுகடுத்த ரஞ்சன் தன்னுடைய ராயல் என்ஃபீல்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
ரேச்சல் சர்ச்சிற்கு செல்லும் அவசரத்தில் இருந்தாள். அவள் எடியை பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது. அவனுக்கு அடிபட்டதில் இருந்து அவனை சந்திக்க அவளை ஷீலா அனுமதிக்கவே இல்லை. அவளுடன் வெளியே கிளம்பும் ஆசை எடிக்கு வந்து விடும் என்று நினைத்தார். ஆனால் இன்று அவளுக்கு அனுமதி கிடைத்து விட்டது. அதனால் அவள் விரைவாக கிளம்பினாள்.
கொஞ்சம் இனிப்பு வகைகளை எடுத்து கொண்டு போய் விடுதியில் இருக்கும் மற்ற