"சரிப்பா… இந்த நிலையில் அவளுக்கு உதவுவதுதான் நல்லது. அவள் இங்கேயே இருக்கட்டும்." நந்தினி ஒப்புக் கொண்டாள்.
"நன்றி நந்து… உங்களுக்கும்தான் அண்ணா" என்று ரேச்சல் சொன்னாள்.
"நான் அவளை பார்த்து இந்த விஷயத்தை சொல்லி விடுகிறேன். மாலையில் உங்களை வந்து பார்க்க சொல்கிறேன்" ரேச்சல் கிளம்பினாள்.
"நானும் உள்ளே போறேன். மனு என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை" நந்தினி வீட்டுக்குள் சென்றாள்.
அப்போது…
"ஹாய் ப்ரோ" என்று அழைத்தபடி ஜெமி வந்தான்.
"ஹாய்.. உங்க போலிஸ் விஷயம் முடிஞ்சிட்டதா?" ரஞ்சன் கேட்க,
"முடிஞ்சிட்டது. உங்ககிட்ட ஒண்ணு கேட்கனும்"
"கேளுங்க"
"நீங்க ஏன் அன்னிக்கு சத்யன் சார் சமாதானம் பேச வந்தபோது பேச்சு வார்த்தையை கொலாப்ஸ் செய்தீங்க."
"அப்படி ஒன்றும் இல்லையே. நான் அந்த இடத்தில் நியாயமா பேசணும்னு நினைச்சுதான் அந்த மாதிரி செஞ்சேன்" என்று ரஞ்சன் சொன்னான்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை. உங்களுக்கு இரண்டு பேரும் பழகுறது பிடிக்கலை. அதை தடுக்க நினைக்கிறீங்க... அப்படிங்கறது எனக்கு தெரிஞ்சிடுச்சு. ஏன்னா நானும் அப்படிதான் நெனச்சேன். அதனாலதான் உங்களை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. பட் வொய் ப்ரோ?"
"ரெண்டு பேரும் பழகுறது எனக்கு புடிக்கலைன்னு தெரியுது இல்ல அப்புறம் என்னத்துக்கு விளக்கும் சொல்லணும் இதெல்லாம் எங்க வீட்டுக்கு ஒத்து வராது"
"எதெல்லாம்… நீங்க இரண்டு பேரும் விரும்ப ஆரம்பிச்சிடுவாங்கனு நினைக்கறீங்களா. அதுக்கு சான்ஸே இல்லை."
"என்ன சான்ஸே இல்லைங்கறீங்க. நட்பு ரீதியாக பழக ஆரம்பிச்சாலும் நாளடைவில் சத்யன் ரேச்சலை விரும்ப சான்ஸ் இருக்கு. ஏன்னா… ரேச்சலின் முகமாற்று சிகிச்சைக்கான டோனர் மீரா.."
"ஓ… உங்களுக்கு மீராவை தெரியுமா?" அவசரமாக ஜெமி கேட்டான்.
"மீராதான் சத்யனுடைய மனைவி. அந்த விபத்துல செத்து போயிட்டாள். இது இரண்டு நாட்களுக்கு முன்தான் எங்களுக்கே தெரியும். சும்மாவே ரேச்சலிடம் மீராவின் சாயல் தெரிகிறது என்று சொல்லுவான்… இப்போ இது தெரிந்தபின் எமோஷனலா ப்ளாக்