'இது சுத்தமான நீர்… சுவையும் மணமும் இல்லை'என்றனர்.
"சூப்பர்… இதே நோட்தான் நானும் எடுத்துள்ளேன்."
அடுத்து வந்த டம்ளர் நீரை அவரைப் போலவே விரலால் தொட்டு சுவைத்து, "ரோஜாப்பூ வாசம் வருகிறது" அதையும் சரியான பதிலாக ஏற்றுக் கொண்டார்.
அடுத்து இனிப்பு சுவை வந்த நீரை சரியாக சொன்னார்கள்…
கடைசியாக ஒரு டம்பளரில் கலங்கிய நீர் வந்தது. அது அழுக்கு நீர் என்பது புரிந்தது. அந்த பேராசிரியர் சற்றும் தயங்காமல் விரலால் தொட்டு சுவைத்து குறிப்பெழுதினார். சற்று தயக்கத்துடன் அவர்களும் அதை செய்தனர்.
'மோசமான சுவை… நாற்றம் இருக்கிறது. வயிற்றை பிரட்டுகிறது' என்றனர். பேராசிரியரின் பதிலுக்காக காத்திருந்தனர். அவர் சிரித்தாவாறே சொன்னார்.
"அது மோசமான வாசம் உடையதுதான். ஆனால் அதன் சுவை எனக்கு தெரியாது. ஏனெனில்.." என்றார். ஐவரும் முழிக்க…
"ஏனெனில் நான் அதனை சுவை பார்க்கவில்லை. நான் நீரில் என்னுடைய சுட்டு விரலை வைத்தேன்… நாவில் நடுவிரலை வைத்தேன். நீங்கள் அதனை சரிவர கவனிக்கவில்லை" என்றார்.
'ப்ராபர்ட்டி மாறிப் போனதை அவர்கள் கவனிக்கவே இல்லை… அச்சோ..ரொம்ப பாவம்..'
"அதனால்தான் கற்றலின் போது கவனமும் இருக்க வேண்டும்.' என்றார்.
'சவுன்ட்ஸ் குட். அதுக்காக சாக்கடை தண்ணீரை டேஸ்ட் பண்ண வைக்கலாமா..' என்று நினைத்த சத்யன் சிரித்துக் கொண்டான். விரல் மாறிய விஷயத்தை யோசித்தபோது சட்டென அவனுக்கு புரிந்து போனது. ஓ… இது போலத்தான் நடந்திருக்குமா?
'ரஞ்சன் என்ன சொன்னான்… ரேச்சல் திருமணமானவள் குழந்தை பெற்றவள் என்றானே… அந்த ரேச்சலின் முகம் சிதைந்து இருந்தது என்று தங்கதுரை சொன்னார். அவ்வாறெனில் ரேச்சல் மீராவாக இருக்க வாய்ப்பு உள்ளதா…
அம்னீசியாவில் இருப்பது மீராவா.. அதனால்தான் அவளுக்கு அவனை தெரியவில்லையா?.
அந்த ரேச்சல் முதல் நாளே ப்ளூ ஸ்ட்ரைப்ஸ் சர்ட் பற்றி பேசினாளே… முதல் சந்திப்பிலேயே மனுக்குட்டியுடன் ஒட்டிக் கொண்டாளே… எடிக்கு அடிபட்டிருந்தபோதுகூட அவனை சத்தீ என்று அழைத்துக் கொண்டு ஓடி வந்து கட்டிக் கொண்டாளே…
அவள்தான் தன்னுடைய அம்மா என்று மனுகுட்டிக்கூட தெரிந்திருக்கிறது… அவனால்தான் ஆழ்மனம் சொன்னதை புரிந்து கொள்ள முடியவில்லையா…
ஆன்ல் ரேச்சலின் அந்த பேச்சு… நடத்தை… ரௌடித்தனம்… கிட்டதட்ட அது ரௌடித்தனம்தான்…