"அம்மா… நீ போகாதேம்மா… அந்த கார்மேகம் கல்பியை கட்டிபோட்டு விட்டு தீ வைத்து விட்டு ஓடி விட்டான். பகல் வெளிச்சத்தில் எங்களுக்கும் தெரியவில்லை. எங்களுக்கே இப்போதுதான் தெரிந்தது. அவளை நெருப்பு சூழ்ந்து விட்டது. காப்பாற்ற போனால் உனக்கே ஆபத்தாகி விடும். இந்த வெளிச்சத்தில் நெருப்பின் வீச்சு தெரியாது."
அவர்கள் சொல்வதை கேட்கும் நிலையில் ரேச்சல் இல்லை. நெருப்பில் சிக்கிக் கொண்ட கல்பியின் கூக்குரல் அவளுடைய நினைவலைகளை சீண்டியது…
இந்த நெருப்பு சுவாலைகள்… அதன் தகிக்கும் வெப்பம்… சுற்றிலும் கிளம்பிய ஓலங்கள்… அவளுக்குள் சுழன்றன…
அதோ அந்த பேருந்து தெரிகிறது… அதனுடைய அதீத குலுக்கலை உணர்ந்தாள்… அதே மரண ஓலம் காதை கிழித்தது… அந்த பெண்… அவள்… தடுமாறுகிறாள்…. அவளுக்கு காலில் கட்டு போட்டிருக்கிறதே… அவளால் சமாளிக் முடியாதே… அவளை பிடிக்க கையை நீட்டியபடி முன்னேறிட… அவளோ உருண்டு பேருந்தின் முன்பக்கம் செல்ல… இருவருகும் இடையில் தீச்சுவாலைகள் எழ… அவளை காப்பாற்றியே ஆக வேண்டும்… இந்த முறை ஒரு உயிரை பலி கொடுக்க அவளால் முடியாது…
"ரேச்சல்" என்று கத்தியபடி தீப்பற்றி எரியும் வீட்டிற்குள் பாய்ந்தாள்.... நிலமையின் நெருக்கடி புரிய… அங்கிருந்தோர் வாளிகளில் தண்ணீரை பிடித்து வீசி தீயை அணைக்க முயன்றனர்….
நீர்பட்டு தீச்சுவாலைகள் கொஞ்சம் தணிய… புகை சூழ்ந்தது. சில நொடிகளில் மயக்கத்தில் இருந்த கல்பியை இழுத்துக் கொண்டு அவள் வெளியே வந்து மயங்கி விழுந்தாள்.
அப்போது அங்கு வந்த சத்யன் ஓடிப் போய் ரேச்சலை தூக்க… ரஞ்சன் கல்பியை தூக்கினான். இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஜெமி வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை சொல்லவும் பதறிய மற்றவர்களும் மருத்துவமனைக்கு சென்றனர்.
"எப்படி இருக்கிறாள் என் செல்லம்" என்று கதறிய ஷீலா இப்போது தாய்மையின் மொத்த உருவமாக அவனுக்கு தெரிந்தார்….
அவனுடைய மீராவை மகளைப்போல பாதுகாத்து உயிரை காப்பாற்றி இன்றுவரை கண்ணுக்குள் வைத்து காத்திருக்கிறார். ஆனால் கண் விழிக்கும்போது மீராவிற்கு ஷீலாவின் நினைவு இருக்குமா என்று தெரியலில்லை…
ஆம்… அவன் மீராவை காரில் கொண்டு வரும் போது மயக்கத்திலும் ரேச்சல்… மனுகுட்டி… சத்தீ என்று புலம்பிக் கொண்டு வந்தாள்.அவளுக்கு சுயநினைவு வந்து விட்டது என்று புரிந்து கொண்டான்… அதனால்தான் ஷீலாவின் நினைவு அவளுக்கு இருக்குமா என்று சந்தேகித்தான்…