இன்னும் அவனின் அந்த அருகாமையும் தீண்டலும் தந்த அந்த படபடப்பு இன்னும் அடங்காமல் இருக்க, அவன் பேசுவது அவள் காதுகளில் விழவேயில்லை.
அவள் அவனையே பார்த்தபடி நிற்க, தன்னுடைய தலையை தாழ்த்தி அவளின் முகத்திற்கு நேராக தன்னுடைய முகத்தை கொண்டு வந்தவன், அவனுடைய விரலால் அவளின் மூக்கை மெல்ல வருடியபடி "பிடிச்சிருக்கா?" என மீண்டும் கேட்க, தன்னிலை பெற்றவள், "ஹ்ம்ம்...தேங்க்ஸ்...நா...நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன்" என்றபடி அங்கிருந்து கீழே ஓட, ஒரு மந்தகாச புன்னகையோடு அவள் போவதையே பார்த்தபடி நின்றிருந்தான் ராம்.
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு..
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து…
தொடரும்
Next episode will be published on 14th Nov. This series is updated weekly on Saturday mornings.