(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

சொல்லவும் அவன் சொல்வதை கவனிக்கும் தோரணையில் நிமிர்ந்து அமர்ந்தான் அசோக்.

"சாரி அசோக். நான் நெறய முறை உன்னை மோசமா திட்டிருக்கேன். ரொம்ப இன்சல்டிங்கா நடந்துருக்கேன். இதுக்கெல்லாம் ஒரு காரணத்தை சொல்லி என்னுடைய தவறை நான் நியாய படுத்த விரும்பல. நான் பண்ணுன தப்புக்கெல்லாம் முழு மனசோட உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்துருக்கேன்" ராம் சொல்ல, அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அசோக்கிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சுதாரித்து கொண்டவன் "சே...என்னடா மன்னிப்பு அது இதுனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு...நம்ம ரெண்டு பெரும் எப்பவும் பிரெண்ட்ஸ் தான்...பிரெண்ட்ஸ்க்குள்ள மன்னிப்பு தேங்க்ஸ் எல்லாம் கிடையாது" என்ற அசோக், "இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்!!!" என்றான் ராமிடம் ஒரு குறுகுறுப்புடன்.

"என்ன சந்தேகம் அசோக்???" ராம் சீரியஸான முகபாவனையோடு கேட்க, "இந்த திடீர் மாற்றம் எதனால்?" என்றான் அசோக் உண்மையாகவே அதற்க்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.

"தமிழ்.." என ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது ராமிடம் இருந்து.

"தமிழா???" அசோக் புரியாமல் கேட்டான். ஒரு நீண்ட பெருமூச்செடுத்து தன்னை நிலை படுத்தி கொண்ட ராம், ஆம் என தலையசைத்தவன் "தமிழுடைய அப்பா தவறிட்டார். நானும் தமிழும் கோயம்பத்தூர் போயிட்டு இன்னைக்கு தான் வந்தோம்" எனவும் "ஓஹ் மை காட்...எனக்கு தெரியாது ராம். ஹாஸ்பிடல்ல நான் கொஞ்சம் பிசியா இருந்ததால ஒன் வீக்கா பாட்டியை பாக்கவும் போகல. ஐ யாம் சாரி" என்ற அசோக்கை பார்த்த ராமிற்கு தனக்கு மட்டும் தான் இத்தனை நாட்களாக இது தெரியாமல் இருந்திருக்கிறது என்று நொந்து கொண்டான் மனதிற்குள்.

ராம் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கவும் "எனி ப்ரோப்லேம் ராம்???" என்றான் அசோக்.

"கோயம்பத்தூர் போனப்போ தான் எனக்கு தமிழ் யாரு அபப்டிங்கறதே தெரிஞ்சுது" என்றான் ராம் மெல்லிய குறளி லகுனிந்த தலையுடன்.

"வாட்....!!!" அதிர்ச்சியுடன் அவனை பார்த்தான் அசோக்.

"ஏதோ ஒரு கோபத்துல தான் தமிழை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால அவளுடைய பாஸ்ட் என்னனு அவ சொல்ல வந்தப்பவும் நான் கேக்கல. நான் கேக்கணும்னு முயற்சி பண்ணவும் இல்லை" ராம் சொல்வதை கேட்ட அசோக்கிற்கு நம்ப முடியவில்லை.

"என்னடா சொல்ற? எனக்கு எதுவுமே புரியல" அசோக் குழப்பத்துடன் கேட்கவும், ராம் கல்லூரி நாட்களில் தமிழை கண்டது, அவளை பற்றி தவறாக புரிந்து கொண்டது, பின் நீண்டும் வருடங்கள் கழித்து அவளை தன்னுடைய வீட்டிலேயே பார்த்தது, அசோக்கும் அவளும்

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.