வரும்போது..
"பாவம் அத்தான் அந்த மீராவை கட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டாரு… அவள் எப்படிப்பட்டவள்ன்னா…"
"ப்ச்… தனு அப்படி எதுவும் கிடையாது. நீயா சொல்லாதே…" சத்யன் தடுத்தான்.
"அத்தான் நீங்க சும்மா இருங்க… இப்பதான் பார்க்க நல்லா இருக்கீங்க. முந்தி பேயடிச்சதுபோல இருந்தீங்க.."
இனிமேதான் பேயடிக்க போகுது… நல்லா வருவே தாயி…
"அப்புறம் மீரா எப்படிபட்டவ தெரியுமா.." என்று ரேச்சல் பக்கம் முழுமையாக திரும்பி காலை மடித்து அமர்ந்து 'அந்த பேய் கதை'யை சொல்ல ஆரம்பிக்க..
"நந்தூ..… " என்று அபயக்குரல் எழுப்பியவாறு தங்கையை தேடி விரைந்தான்.
"என்னாச்சு"
அபயஹஸ்தத்துடன் ரஞ்சன் பிரசன்னமானான். அவனிடம் தனு செய்து கொண்டு இருக்கும் 'சம்பவத்தை' விளக்கினான்.
"உனக்கு தேவைதான்... தவறான வாக்குறுதி…! தனுவை எப்படி சமாளிக்கப் போகிறாய்?"
"மீராவை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்பதுதான் சிக்கல்"
"ஏன்.."
"தனுவிடம் மன்னிப்பு கேட்டு திட்டு வாங்கி நிலமையை சமாளித்து விடலாம். அது ஒன் டைம் சம்பவம்… ஆனால் மீராவிடம் கோடி முறை கேட்டாலும் வேதாளம் வில் பீ இன் முருங்கை மரம்."
"ஆனால் ரேச்சல் எதுக்கு கோவிச்சுக்கனும்?"
"அவள்தான் மீராவாச்சே… மீராவைத்தான் தனு கொல்லி மலை நீலி ரேஞ்சுக்கு விவரிச்சுகிட்டு இருக்காளே.."
"ஸோ வாட்… அதுக்கு மீராதான் கோபப்படனும். ரேச்சலுக்கு மீராவை தெரியாதே"
"இல்லை அவளுக்கு தெரியும்… அவளுக்கு எல்லா மெமரியும் ஆக்டீவாயிடுச்சு" அவன் மின்னுமோள் பற்றி விளக்கினான்.
"கன்டினயஸ் அம்னீசியா… அடடா.. இப்ப என்ன செய்றது"
"ரேச்சல் மறைச்சதை நான் கண்டுபிடிச்சிட்டேன்னு கார்னர் பண்ணிட்டு இருந்தேன்… நீல சாயம் வெளுத்து போச்சுன்னு ரகளை விடலாம்னு நினைச்சா…"
"தனு உன்னோட சாயத்தை வெளுத்துட்டாளா… ஆனால் சத்தி… உன்னை உரிமை கொண்டாடுவதைகூட போய் தொலைனு மீரா மன்னித்து விடுவாள். ஆனால் மனுவை மை பேபின்னு சொன்னால் அடி பின்னிடுவாளே…"