"போ அத்தான்… நீயும் உன் பொண்ணும்… பமரேனியன் நாய் குட்டி மாதிரி கடிச்சு வைக்குது. நான் போறேன்.."
"நாய் குட்டினு சொன்னேனா பல்லை தட்டுவேன்" என்று ரேச்சல் கூவினாள்.
"ஆங்… அது குட்டி குரங்கு. நீ அதுக்கு சப்போர்ட் பண்ணாத"
"கொன்னு போடுவேன். குழந்தையை தப்பா ஒரு வார்த்தை பேசக் கூடாது"
"ஐயோ.. இவள் வேற பேயாட்டம் போடறாள்"
"நீதான சொன்ன பேய்னு அது இப்படித்தான் ஆடும்." ரேச்சல் கத்த,
"நான் எப்போ உன்னை சொன்னேன். மீராவைத்தான் சொன்னேன்."
"லூசு… நான்தான் மீரா... என்னை பேய்னு சொல்ற… மனுகுட்டியை வேற திட்டுற. தாயில்லாத பிள்ளைனு நினைச்சிட்டியா. தொலைச்சிடுவேன். உன்னை மம்மினு கூப்பிடத்தான் நான் பத்து மாசம் சுமந்து பெற்றேனா… அடிங்.." குழந்தையை கட்டிக் கொண்டு ரேச்சல் ஆவென்று கத்த..
ஆகா… உண்மையை அவளே சொல்லி விட்டாள் என்று சத்யன் புன்னகைத்தான். ஆனால் தனுவிற்கு விஷயம் புரியவில்லை. அவள் மீராவின் ஆவி ரேச்சலை பிடித்துக் கொண்டது என்று பயந்து போனாள்.
"மீராவா… நீ செத்துட்டேனு சொன்னாங்க.."
"பேய் எப்படிம்மா செத்து போகும்… அதுதான் ஏற்கனவே பேயாயிடுச்சே… ஆமாம்… நீ என்ன சொன்ன… உன் அத்தானை நான் பச்சை மோகினியா வந்து மயக்கினேனா… உன் அத்தானின் இரத்தம் குடிக்க வந்த ரத்த காட்டேரியா… அப்புறம் என்ன சொன்னே.. பணத்தாசை பிடித்தவள்… வசியம் செஞ்சு வீட்டுக்குள்ள வந்த மாயக்காரி… " ரேச்சல் அடுக்க…
அட, இந்த தனு நம்மைவிட அதிகமாக மீராவை கடுப்பேற்றி இருக்கிறாள். சோபாவில் குத்துகாலிட்டு அமர்ந்து இதைத்தான் பேசினாளா?.
அப்படி என்றால் மீராவின் முதல் அஸைன்மென்ட் தனுவிற்குதானா… சத்யன் அங்கு நடப்பதை ஆர்வமாக கவனித்தான்.
"நீ… நீ… என்னை பயமுறுத்த பார்க்கறே… நீதான் மீராவின் ஆவிங்கறதுக்கு என்ன ஆதாரம்…"
"ஆதாரம்லாம் சொல்லனும்னு அவசியமில்லை. மனுவையும் என்னையும் திட்டியதற்கு மன்னிப்பு கேட்டாகனும்… இல்லேனா குரல்வளைய பிடிச்சு கடிச்சு வச்சிடுவேன். அப்புறமா உன் அத்தானோட போய் என்னை பற்றி 'பெப்பே.. பெப்பேனு' பேய் கதை பேசு…" அவள் குரல் உயர உயர… தனு நடுங்கி போனாள்.
ரேச்சலுக்கு பின்னால் நின்ற நந்தினிக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு… முகத்தில் பயம் காட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்… அதை பார்த்து இன்னும் பயந்து போன தனு