நான்தான் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் அப்போது அவர் மீது ஒரு க்ரஷ் இருப்பதாக நினைத்தேன். உன்னை தவிர்க்க எண்ணி ஏதாவது சொல்லியிருக்கலாம். மற்றபடி அவர் தவறாக எதுவும் சொல்லி இருக்க மாட்டார்னு நம்பறேன். நீதான் பேசி சிக்கலை தீர்த்துக்கணும்." என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.
"உங்களிடம் பேசவே எனக்கு பிடிக்கலை" என்று சொல்லிவிட்டு நகர முயற்சித்த மீராவை சட்டென தூக்கி மாடிப்படி வளைவில் இருந்த லாஃப்டில் அமர்த்தினான். மீரா உயரமான இடம் என்றால் பயப்படுவாள்..
கைகளால் அங்கிருந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டவள்…
"சத்யன்… எனக்கு பிடிக்காது. இறக்கி விடுங்க… பயமாக இருக்கிறது… கீழே விழுந்து விடுவேன்.. திஸ் ஈஸ் வெரி வொர்ஸ்ட்.." என்று கத்த ஆரம்பித்தாள்.
"நான் சொல்வதை முழுவதுமாக நீ கேட்ட பின்தான் இறக்கி விடுவேன். அமைதியாக என்னை பேச விடு"
"நான் கேட்க மாட்டேன்.. நான் உங்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஓடிப் போகணும்..." அவளை பிடித்து தூக்கிய முரட்டுத்தனம் கோபத்தை கிளப்பியது.
"என்னை பார்த்து பேசு.. உன்னோட சத்யன்கிட்ட ஒரு முறை முகம் பார்த்து பேசு... ப்ளீஸ்" அவனுடைய கொஞ்சும் குரல் அவள் மனதை அசைத்தது. மெல்ல அவனை பார்க்க… அவனுடைய கடினமான இரும்பு பிடிக்கு முற்றிலும் மாறான மென்மையான பார்வை அவளை தடுமாற வைத்தது.
"உனக்காக நான் காத்திருந்த காலம் இன்னும் முடியவில்லையா மீரு…" அவனுடைய கண்கள் கலங்கி இருந்தன.
ப்ச்… அவனா சொல்வதை கேட்டு விட்டு ஒரு முடிவிற்கு வரலாமே!. மனம் கசிந்தாள்..
"சொல்லுங்க…"
"சரி… நான் அப்படி என்ன தவறு செய்தேன் சொல்லு பார்க்கலாம்…"
"என்னுடைய உணர்வுகளை காயப்படுத்தி இருக்கீங்க…"
"நீ என்னை நெருங்க விரும்பியதை அவமதித்து விட்டேன் என்று சொல்கிறாய். அது பப்பி லவ்னு நினைச்சேன். நீ வேற சைல்டிஸ்ஸா எடிகூட சுத்திகிட்டு கல்லை எடுத்து அடிச்சிகிட்டு திரிஞ்சதால மெச்சூரிடி இல்லைனு நினைச்சேன். "
"அதுக்காக… வளைச்சு போட பார்க்கிற… அப்படி பேசலாமா?"
"ஓகே… உங்கம்மாவிற்கு ஒரு வாக்கு தந்தேன்… உன்னை விட்டு விலகி இருப்பேன் என்று… நீயும் என் பக்கத்தில் வரக்கூடாது… நானும் உன்னை நினைக்க கூடாது… அதுக்காக.. "
"அதுக்காக கேவலமாக பேசுவதா.."