தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…
"ஹே… நீதான் மீரா என்பதை நான் நம்ப மாட்டேன்…"என்றாள்.
"அப்படியா… வா… வா ரகுவிடம் போய் கேட்கலாமா…"
"எந்த ரகு…" தயக்கத்துடன் கேட்டாள்.
"மேல வண்டிக்கார தெரு ரகு… கேட்டரிங் படிச்சுட்டு உனக்கு விதவிதமா சமைச்சு தருவானே…"
"அவன்…"
"நீ உன் அத்தானை கட்டிக்க போறேன்னு சொல்லிடறேன்…"
அப்போது குறுக்கிட்ட சத்யன்…
"என்ன தனு இதெல்லாம்.. யார் அந்த ரகு…"
"அது… நான் போறேன்… அந்த ரகுவே தேவலாம். இங்கே மீரா பேயா அலையுறா… உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மம்மிகிட்ட சொல்லிடறேன்." சொல்லிக் கொண்டே ஓடினாள்.
அவள் ஓடுவதை பார்த்து நந்தினி சிரித்தாள்.
"மீரா அண்ணி… உங்களுக்கு எல்லாமே நினைவிற்கு வந்து விட்டது. ஆனால் ரேச்சலாகவே இருக்கனும்னு நினைக்கறீங்க . ஏதோ மன வருத்தம் இருக்கு. கண்டிப்பா அதுக்கு நாங்க காரணம் இல்லை… எதுனாலும் அண்ணன்ட்ட பேசி தீர்த்துகோங்க. மனு, வாடி செல்லம்… நாம மம்மம் சாப்பிட போகலாம்" என்று நகர்ந்தாள்.
மறுபடியும் ரேச்சல் முன் சிங்கிளாக சத்யன் நின்றான்.
"மீரா எப்போதாவது நீ என்னிடம் வருவாய்னு நான் நினைச்சேன்…"
"அதனாலதான் தனுகிட்ட ப்ரபோஸ் பண்ணியிருக்கீங்க… ஆனால் அதுபற்றி எனக்கு துளி வருத்தமும் கிடையாது… "
"அப்படி சொல்லக்கூடாது… நான் ப்ரபோஸ் பண்ணலை… அது ஒரு சாய்ஸ்தான்… உன்னிடம் அனைத்தையும் தெளிவாக சொல்ல வேண்டும்… எனக்கு ஒரு சான்ஸ் கொடு…"
"யப்பா சாமி… நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்… நான் எதுவும் கேட்கவும் விரும்பலை… ரேச்சல்தான் நான்… அதுதான் என் கேரக்டர்… லா பாய்ன்ட் பேசி ட்ரிகர் பண்ணுவேன்… வளைஞ்சு போக மாட்டேன்… தட் ஈஸ் ரியல் மீரா… உங்களுக்கு பிடிக்காத மீரா… "
"அதுக்காக ரேச்சலாகவே இருக்க முடியாது மீரா… "
"இருக்க முடியும். ரேச்சலை உண்மையாக நேசிக்கற அம்மா இருக்காங்க… எனக்கு அவங்க போதும்.. என்னை தொலைச்சிட்டு... ஒளிச்சிட்டு... வாழ விருப்பம் இல்லை… நான் நானாகத்தான் இருப்பேன். அப்புறம் மனுகுட்டியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க. இல்லேனா சட்டபடி நடவடிக்கை எடுப்பேன்"