அவனை மேலும் பேச விடாமல் அவள் விரைந்து வெளியேறினாள். வீட்டினுள் நுழையவுமே அவளை பார்த்த ஷீலா...
"ரேச்சல் ஏன் கோபமாக வருகிறாய்…" என்றார்.
"மா… " என்று அவரை கட்டிக் கொண்டு அழுதாள்…
"நான் மீரான்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. மயக்கம் தெளியும்போதே தெரியும். ஆனால் எனக்குதான் மீரானு சொல்லிக்க விருப்பம் இல்லை… ஏன்னா மீராவிற்கு என்று யாருமே இல்லை…"
"அப்படி சொல்லக் கூடாது ரேச்சல்… உனக்காக அன்பான குடும்பம் காத்திருக்கிறது…"
"இல்லைம்மா… உங்களுக்கு தெரியாது… சத்யன் தனுவை கல்யாணம் செய்துக்க முடிவு செஞ்சிட்டார். இப்போ நான்தான் மீரானு தெரியவும் ஒரு கட்டாயத்திற்காக ஏற்றுக் கொள்கிறார்."
"என்னால் நம்பவே முடியவில்லை"
"விடுங்கம்மா… மனுவை நானே வளர்த்துக் கொள்கிறேன். என்னோட பேர்ல இருக்கற சொத்துக்களை வாங்குவேன். மனுவிற்கு அவளுடைய தாத்தா தந்த பரிசாக இருக்கட்டும். என்னுடைய பிஸினஸை திரும்பவும் ஆரம்பிச்சு ஜெயிப்பேற். நீங்க என் கூடவே இருக்கணும்."
"நான் எப்பவுமே உன்கூடத்தான் இருப்பேன். ஆனால் சத்யன்கிட்ட விளக்கம் கேட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. தனுவிடம் தவறான எண்ணத்தில் ப்ரபோஸ் செய்திருக்க மாட்டார்.."
"வேண்டாம்மா… அவரைபற்றி பேசாதீங்க. நான் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கேன். ஏழு மாதமாக என்னை தேடாமல் இருந்துட்டு இப்ப வந்து கதை சொல்லுவாரா… விடுங்கம்மா.. நாம உங்க ஊருக்கே போயிடலாம்." அழுதாள்.
அப்போது புயலைப்போல சத்யன் உள்ளே வந்தான். அவனை பார்க்கவும் ஷீலா உள்ளே செல்ல திரும்பினார்…
"ஆன்ட்டி நீங்க இங்கேயே இருங்க… ரேச்சலை எனக்கு பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா?"
உண்மைதான் மருத்துவமனையில் வைத்து அவன் ரேச்சலை அணைத்தபோது அந்த கண்களில் மின்னிய காதலை பார்த்திருக்கிறார். அதனால்தான் மறுநாளே தடுப்பு நடவடிக்கையை ஆரம்பித்தார்.
"ஆமாம்… மீரா அதுதான் உண்மை. சத்யன் தம்பி உன்னை விலக்கி வைக்க வேண்டும் என்று