"அதுதான் எனக்கும் கவலையா இருக்கு. இந்த தனு வேற மெகா சீரியல் போல இன்ச் இன்ச்சா கதை விடறா…"
"நீதான் சனியனை தூக்கி பனியன்ல விட்டுகிட்டே… போன் பண்ணி வர வச்சு அவளுக்கு தீபாவளி ஆஃபர் மாதிரி மனைவி போஸ்ட்டை கொடுத்தே… அவள் அதுக்கான அட்வான்டேஜை எடுத்துக்கறாள்"
"என் தங்கச்சி எங்கேப்பா… இப்போதைக்கு அவள்தான் ட்ராபிக் ஜாமை கிளியர் பண்ணனும். அவளுக்குதான் தனு பயப்படுவாள்"
"ஆங்… நான் இங்கேதான் இருக்கேன்.. அத்தனையும் கேட்டுகிட்டு இருக்கேன்… இப்படி பண்ணீட்டீங்களேண்ணா… உங்களை ஹீரோ மாதிரி என் பிள்ளைக்கு காட்டனும்னு நினைச்சேன்…"
"இப்ப என்னவாம்… வில்லன் மாதிரி ஆயிட்டேனா.."
"அதுகூட பரவாயில்லை… ரேச்சல் மீரானு குழம்பிபோய் டபுள் கேம் ஆடி காமெடி பண்றீங்க"
"டபுள் கேமா.."
"அண்ணா… உங்கள் மனம் ரேச்சல் பக்கம் சாய்ந்துட்டதை நீங்க மறைக்க… மறுக்க பார்த்து அவளை திட்டி... தனுவை முன்னிலை படுத்தினு… மாட்டிகிட்டீங்க. ம்… நானே போய் சமாளிக்கறேன்" என்று சிரித்தபடி சென்றாள். தங்கை உள்ளவன் தனுவிற்கு அஞ்சான்..
கையில் மனுவை தூக்கிக் கொண்டு… தனுவிடம் சென்றாள்.
"ஹாய் தனு… மனு குட்டியை தேடினாயாமே இந்தா பிடி " என்று நீட்டினாள்
தனு சாதாரணமாக மனுவை வாங்க மாட்டாள்… ஆனால் ரேச்சலிடம் அவள் விட்ட 'மனுதனுயாணம்' நினைவிற்கு வர கை நீட்டி அவளை வாங்கினாள். ரேச்சலிடம் செல்லும் ஆர்வத்தில் இருந்த மனு இந்த நான்சென்ஸ் குறுக்கீட்டினால் கடுப்பாகி அவளை கடித்து வைத்தது.
"ஆவ்…" என்று.அலறிய தனு துள்ளி எழுந்தாள். மனுவை கை நழுவ விட்டு…
"கடிச்சு வச்சுட்டு பிசாசு" என்று கண்ணீர் விட்டாள்.
"குழந்தையை பிசாசுன்னு சொல்ற.. என்ன தைரியம்… இன்னோரு.தடவை சொன்னே நானே உன்னை கடிச்சு துப்பிடுவேன்" தரையில் விழ இருந்த மனுவை கை நீட்டி ஏந்திய ரேச்சல் கத்தினாள்.
"அவளை கத்த விட்டு… நந்து நீ சிரிக்கறியா?. இந்த அத்தான் எங்க போனாரு.. எல்லாம் இந்த மம்மியால வந்தது" என்று அழுதபடி வெளியே ஓடினாள். அவளை வழி மறித்த சத்யன்,
"இரு தனு. மனுவோட நாம அவுட்டிங் போகலாம்னு சொன்னேல. வா.. போகலாம்" என்றான்.