தாத்தா... நாம தேடி வந்தது கிடைக்கவில்லை. இதில் இருப்பது என்னோட கார்த்திக்கோட கடந்த காலம் மட்டும் தான்.. அம்மா அப்பா செய்த ரிசர்ஜ் பேப்பர் கிடைக்கவில்லை. அதை கண்டு பிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அது தான் அம்மா அப்பாவோட ஆசை, கனவு. விவசாயிகளுக்காக நாட்டோட நலனுக்காக அவர்கள் கண்டு பிடித்தது அந்த கயவர்களிடம் கிடைக்க கூடாது. அதனால் நான் அதை தேடி போறேன். நீங்க கார்த்திக் கிட்ட போங்க.
குயிலி... நானும் உங்கூட வரேன். அதை கண்டு பிடித்த பிறகு இரண்டு பேரும் சேர்ந்து கார்த்திக்கை பார்க்க செல்வோம். உன்னை தனியாக விட பயமா இருக்குமா.
தாத்தா.. அம்மா அப்பா உயிரோடு இருக்காங்களா என்றே தெரியவில்லை. ஆனால் ராமு மாமாவும் கார்த்திக்கும் என் கண் முன்னால் இருக்காங்க. கார்த்திக்கு நான் யாரென்று தெரியவில்லை. ராமு மாமா எல்லாம் தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்னால் அவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டும். ப்ளீஸ் தாத்தா புரிஞ்சிக்கோங்க ... எனக்கு உதவி செய்ங்க என்று குரல் தழுதழுக்க கெஞ்சினாள் குயிலி.
அதற்கு மேல் ஆசிர்வாதம் தாத்தாவால் மறுக்க முடியவில்லை. சரி மா... நீ அடுத்ததாக எங்கே போற
தாத்தா... இந்த பேப்பரில் இருக்கும் முப்பத்தி ஆறு மார்க் இல்லை. மூணாரை குறிக்கிறது. அதனால் நான் இப்போது கேரளா செல்கிறேன். நீங்கள் கவனமாக கார்த்திக்கிடம் செல்லுங்கள் என்றாள்.
சரி குயிலி. நான் கவனமாக இருக்கேன். நீ ரொம்ப கவனமாக இரு... ஜாக்கிரதை மா...
சரி தாத்தா என்றவள் ஆசிர்வாதம் தாத்தாவை சென்னை பஸ்ஸில் ஏற்றி விட்டு விட்டு தான் போக வேண்டிய இடத்திற்கான பஸ்சை தேட ஆரம்பித்தாள். அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கினார்கள் பிரதாபனின் ஆட்கள்.
ஆசிர்வாதம் கார்த்திக்கை சந்தித்து உண்மையை புரிய வைப்பாரா?.... குயிலி பிரதாபன் ஆட்களிடம் சிக்காமல் தேடி செல்வதை கண்டு பிடிப்பாளா?
தொடரும்