அப்பா சொல்ல...
"அப்பா… ஒன்னுல்ல இரண்டு ப்ளேட். எனக்கும் வேணும்ல"
"ஹாங் அதெல்லாம் காசியண்ணன்ட்ட வாங்கிக்கோங்க. நான் என் பையனை மட்டும்தான் கவனிப்பேன்" பூரணி அலட்டி கொண்டார்.
"இந்த வீட்டுல ரெண்டாவது பையனை ரெண்டாந்தரமாக நடத்துகிறார்கள்…"
"நீ வேற… நான் அவளுடைய ஒரே ஹஸ்பெண்ட்.. என்னையே மதிக்கறதில்லை" அப்பா அலுத்துக் கொண்டார்.
அழகான இந்த குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்தே ஆக வேண்டும்….
ராம்குமார் ஒரு பிஸினஸ் மேன் வீட்டிற்கான வண்ண கலவைகளில் கோடி கோடியாக சம்பாதிக்கிறார். . அவருடைய மனைவி பூரணி மனத்திலும் குணத்திலும் பரிபூரணி… நிறைஞ்ச மனசுகாரங்க…
மித்திரனும் சைத்ரனும் அவர்களுடைய இரண்டு புத்திரர்கள். இளையவன் சைத்ரன் குற்றவியல் வழக்கறிஞராக இருக்கிறான். மூத்தவன் மித்திரன் ஏஎஸ்பியாகபணியாற்றி வருகிறான். நீண்ட நாட்கள் கழித்து டெல்லியில் இருந்து வருகிறான். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
மாலை ஐந்து மணி…
வாசலில் வந்து நின்ற ஜீப்பில் இருந்து மித்ரன் இறங்கினான். ஓடிப் போய் அவனை கட்டிக் கொண்ட பூரணி கண் கலங்கினாள்.
"ஏன் செல்லம் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு?"
"சாரிம்மா… நான் நேரா ட்யூட்டி ஜாயின் பண்ணிட்டு வரேன்.அதுதான் லேட் ஆயிடுச்சு" பூரணியை கட்டி முத்தமிட்டான்.
"போதும்… வாசலேயே படம் காட்ட வேண்டாம். உள்ளே வாங்க…" சைத்ரன் சொன்னான்.
"ஹாய்… ஆபிசர்… எப்படி இருக்கீங்க" மித்ரன் கூவினான்.
"டேய் அண்ணா… நீ இல்லாம.."
" நான் இல்லாம கஷ்டப்பட்டியா ஸோ ஸ்வீட்…"
"நாட் லைக் தட்… நீ இல்லாம ஹாப்பியா இருந்தேன். இனிமே எப்படி இருப்பேன்னு சொல்ல முடியாது"