வாளை வீசினாள்.
"இவ்வறு நிமிர்ந்து நின்று வாளை வீசினால் எதிரியின் தலைக்கு இலக்காகும்… அதையே சற்று குனிந்து வாளை குறுக்காக பிடித்தால் தடுப்பு முறையாகும்… " என்று சொல்ல…
"என்ன இது…" என்று அவளுடைய வாளை பற்றி நிறுத்தினான் இளமாறன்.
"பிள்ளைகளா… இன்றைய பயிற்சி இத்துடன் முடிந்து விட்டது. கிளம்புங்கள்." என்று அனுப்பிவிட்டு, அவளிடம் திரும்பி...
"இந்த நிலையில் வாள் பயிற்சி செய்யலாமா குழலி…" என்று கடிந்து கொண்டான்.
"சும்மா சொன்னால் கேட்கும் வகையல்ல என் தோழி… தாங்களே அருகில் இருந்து அவளுக்கு தடுப்பு காவல் போட வேண்டும்." என்று அருகிலிருந்த நங்கை உரைத்தாள்.
"அடி… இதற்குதான் காத்திருந்தாயா.. என் வாள் வீச்சை தடுக்க உன் தனயனால் முடியுமா என்ன"
"வாள் வீச்சை மட்டுமல்ல… வாய் வீச்சையும் தடுக்க முடியாது.. நங்கை நீ கிளம்பும்மா..இந்த பெண்ணிற்கு அறிவுரை சொன்னால் தலைக்குள் ஏறாது…" என்று இளமாறன் சொன்னான்.
"சரி அண்ணா… அவளை பார்த்துக் கொள்ளுங்கள்…" என்று நங்கை கிளம்பினாள்.
"ம்… இன்னும் எதற்கு காத்திருக்கிறாய்?.இப்படி அமரலாமே… உன்னிடம் பேச வேண்டும்." என்றான்.
"அமர நேரமில்லை ஐயா… சொல்ல வந்ததை விரைவில் சொல்லுங்கள்... தெற்கிலிருந்து சோழர்படை வந்து கொண்டிருக்கிறதாம்…"
"ஆஹா… இதென்ன அருள் வாக்கா.. இப்போதைக்கு சோழர் படையெடுப்பு இல்லையம்மா… சோழ இளவரசனுக்கு முடிசூட்டு விழா நடத்துகிறார்களாம். சாளுக்கியர்களை இப்போதுதான் அடித்து துரத்தி இருக்கிறோம்...இனி உன்னுடன் சற்று ஓய்வெடுக்கலாம்…"
"அருமை பிரபோ…தயை கூர்ந்து நற்செய்தி சொன்னீர்கள்…" அவள் சற்று தலை சாய்த்து கை கூப்பினாள்.
"என்ன ஒரு அடக்கம்… ஐயா… பிரபோ.. தயை…?. ஆனால் நான்