(Reading time: 17 - 34 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

நயனிலன்....னிலன்…."

"ஆஹா.. குழலிஎனக்கு இந்த அழைப்பு மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் உன்னுடைய இனிய குரலால் நயனிலன் ன்று அழைக்கும்போது காதில் தேன் பாய்கிறதுஇன்னொரு முறை சொல்" அவன் கண்களை மூடி இசையில் நனையும் பாவம் காட்டினான்.

"என்னவொரு தந்திரம்பழிசொல்லையே பட்டம் தந்ததுபோல மாற்றிக் கொள்கிறீர்களா.. இந்த உத்தி என்னிடம் செல்லாது. தாங்கள் மாறும்வரை நயனிலன் என்றுதான் அழைப்பேன்…"

"சரிசரிபொதுவில் வைத்து சொல்லி விடாதே… ' அவன் கெஞ்சுதலாக கூறினான்.

"அது அப்போதைய என்னுடைய சிந்தனையை பொரறுத்தது…" அவள் உதாசீனம் காட்டினாள்.

"இந்த பிரச்சினைககு விரைவில் தீர்வு கண்டாக வேண்டும்நான் அரசரிடம் பேசுகிறேன்"

"எதற்கு…?"

"உன்னுடைய பேறு காலம் நெருங்குகிறது குழலிஉன் தாய் வீட்டில் உன்னை சேர்ப்பிப்பது நல்லது என்று நினைக்கிறேன்."

"அதெல்லாம் வேண்டாம்உங்களை இங்கே விடுத்து நிம்மதியாக இருக்க முடியாது. நான் இங்கேயே இருக்கிறேன்"

கார்குழலி வேண்டாம் என்று சொன்னாலும்  விதி அவர்களை அந்த கோட்டத்தை விட்டு விரட்டியது

வழக்கம்போல சதி… விதி இரண்டும் சேர்ந்து அடுத்த முப்பதாவது நாளே இளமாறனுக்கு இரண்டகம் செய்து தேச துரோகம் குற்றம் சாட்டி நிறுத்தியது. அரசரின் உத்தரவாக அவனை நாடு கடத்த விதிக்கப்பட்டான்.

நிறை மாத கர்ப்பிணியான கார்குழலியை அழைத்துக் கொண்டு அண்டை நாட்டில் இருக்கும் அவளுடைய தாய் வீட்டிற்கு கிளம்பினான். அவனுடைய உடமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்களுடைய வாள்கொஞ்சம் உணவுமாற்று ஆடைஇவற்றுடன் இருவரும் நடை பயணமாக காட்டு வழியில் செல்ல ஆரம்பித்தனர்.

காஞ்சி அருகில் இருக்கும் குழலியின் தாய் வீட்டை அடைய

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.