தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 10 - ஜெபமலர்
ஜனனிக்கு திருமணமா... எப்படி.. ஏன் இந்த திடீர் முடிவு? என்னதான் நடக்கிறது என்று எதுவும் புரியாமல் யோசித்துக்கொண்டே அமர்ந்து இருந்தாள் சந்தியா.
ஏய் சந்தியா... இப்படியே உட்கார்ந்து இருக்காமல் உன் பிரபோசர் கிட்ட போய் சொல்லு... அவர் ஏதாவது முயற்சி செய்யலாம்.
ஆமாம் மா... நல்ல ஐடியா.. நீ என் செல்ல அம்மா என்று கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ப்ரொபோஸரை காணச் சென்றாள்.
வணக்கம் சார்...
வாம்மா சந்தியா... எப்படி இருக்கிற..
நான் நல்லா இருக்கேன் சார்.
நீங்க நல்லா இருக்கீங்களா... வீட்ல மேடம் குட்டீஸ் எல்லாம் நல்லா இருக்காங்களா..
எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா... பெரியவன் ஊரிலிருந்து வந்து இருக்கிறான். அதனால் எல்லாரும் வெளிய போயிருக்காங்க.
சரி சார் என்றவள் மனதின் ஓரத்தில் ஏதோ மிஸ்ஸிங் என்று யோசிக்க தொடங்கினாள், ஆனால் அறுபது நொடி கூட தேவைப்படாமல் அவளின் கேள்விக்கு அவள் மனது விடை கூறியது.
வந்ததும் எப்போதும் ஜனனி பற்றி விசாரிக்கும் சார் இன்று அவளைப் பற்றி விசாரிக்கவில்லை. எப்போதும் மறக்காதவர் இப்பொழுது எப்படி மறந்தார் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சந்தியா.
என்ன யோசனை சந்தியா...
சார் அது வந்து.... ஜனனிக்கு திருமணம்.
நல்ல விஷயம்... மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று இயல்பாக கேட்க சந்தியாவிற்கு திக்கென்றது.
சார்... என்று தன்னிடம் இருந்த போஸ்டை அவரிடம் கொடுக்க பிரித்து படித்து பார்த்தவர் சந்தியா, நல்ல விஷயம் தான். எங்கே ஜனனி திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விடுவாளோ என்று பயமாக இருந்தது. அவளது எதிர்காலம் நன்றாக இருக்கட்டும் என்றவர் உள்ளே சென்று ஒரு கிப்ட் உடன் வெளியே வந்தவர் சந்தியா... இதை என் சார்பாக ஜனனிக்கு தந்துவிடு என்று சந்தியாவின் கையில் கொடுத்தவர் போய் சீக்கிரம் கிளம்பு, பிளைட் பிடித்து போகனும்... இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்ல அங்கிருந்து வெளியே வந்தாள்.
ஆனால் மனதில் ஒரு சிறு சந்தேகம் வந்தது. இந்த திருமணம் பற்றி ஏற்கனவே அவருக்கு