எதுவும் சந்தியாவை பாதிக்கவில்லை. ஜனாவா என்றபடியே திரும்பி பார்க்க அவளின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தன. ஜனா என்று மீண்டும் அவள் உதடுகள் சற்று சத்தமாக உச்சரிக்க அவனை மீண்டும் மேலிருந்து கீழாக அளவெடுப்பது போல பார்த்தாள் சந்தியா.
அவளின் இந்த பார்வை ஸ்வீனாவிற்கே சற்று எரிச்சலூட்டியது.
ஜனாவிற்கோ சொல்லவே வேண்டாம்... ச்சீ என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
சந்தியாவின் மகிழ்ச்சிக்கோ அளவில்லாமல் போனது. யாரை பற்றியும் யோசிக்கவில்லை. இனி ஜனனி வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சாரி அன்ட் தேங்க்ஸ் என்று சொல்லி ஸ்வீனா கையை பிடித்து குலுக்கி விட்டு அங்கிருந்து ஜனனியை பார்க்க ஓடோடி சென்றாள் சந்தியா.
ஜனா ஸ்வீனாவை தேடி வந்து தனுவை அவளிடம் கொடுத்துவிட்டு "நண்பனை போல தான் நண்பன் இருப்பான் என்று புரிந்து கொள்" என்று சலிப்பாக கூறியவன் அங்கிருந்து சென்று விட்டான்.
இந்த சந்தியா ஏன் அண்ணனை இப்படி பார்த்து வைத்தாள். ஏற்கனவே அண்ணன் ஜனனியை பற்றி தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறார். இதில் இந்த சந்தியாவின் பார்வை வேற கூட கொஞ்சம் அண்ணனை ஏற்றி விட்டு விட்டது... என்னத்தை சொல்ல.. என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றவள் யோசனையுடன் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
எப்பப்பப்பா.. இந்த கல்யாணத்தை நடத்தி முடிப்பதற்குள் நான் ஒரு வழி ஆகி விடுவேன் போல என்று முனுமுனுத்தவள் அருகில் வந்து நின்றான் அஸ்விட்.
அஸ்... வாங்க ஒரே டென்ஷன் என்று சொல்ல அவனோ ஸ்வீனா இந்த கல்யாணத்தை முதல்ல நிறுத்து என்றான் கோபமாக.
அவன் ஸ்வீனா என்று அழைத்த விதமே அவனின் கோபத்தை ஸ்வீனாவிற்கு காட்டியது. ஏன் என்று தயங்கியபடி கேட்டவளிடம் ஒரு பழைய நியூஸ் பேப்பரை நீட்டினான் அஸ்விட். அதில் "சொத்திற்காக அக்கா கணவரை கொன்ற இளம்பெண் கைது" என்ற செய்தியோடு ஜனனியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
ஸ்வீனாவை தேடி வந்த சந்தியா அஸ்விட் பேசியதை எல்லாம் கேட்டாள். அடக்கடவுளே, இந்த நேரத்திலா இந்த பேப்பரை இவர் பார்க்க வேண்டும். இனி ஜனனியின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயத்தில் செய்வதறியாது திகைத்து நின்றாள் சந்தியா.
ஸ்வீனாவோ மூச்சு விட மறந்து அஸ்வித்தையே பார்த்து கொண்டே நின்றாள்.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.