(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

 நம் வீட்டில் நடக்கும் அனைத்து காரியங்களும் அறிந்த அவள் நமக்கு எதிரான ஒரு வலுவான ஆயுதமாக மாறி விடக்கூடாது என்றுதான் அவளை வீட்டைவிட்டு வெளியே தனியே அனுப்புவது இல்லை. அனுப்பினாலும் தைரியமாக எதையும் சாதிக்க முடியாத ஒரு கோழையைப் போல் அவளை அடக்கி ஆண்டு வருகிறேன். அவள் இப்படி இருப்பது தான் நமக்கு பாதுகாப்பு. அதனால் அவள் வீட்டிலேயே இருக்கட்டும். நமக்கு தேவையான சில காரியங்களை நாம் செய்து முடிக்க மல்லி போல ஆட்கள் நமக்கு மிகவும் அவசியம் என்று ஒரு எகத்தாள சிரிப்பு சிரித்தான்.

 அதுவும் சரிதான்... புஷ்பா எல்லாவற்றையும் தனியாளாக நின்று செய்து முடிப்பாள். அவளை கடத்தி கொண்டு போய் மிரட்டினாலும் அவளிடமிருந்து ஒரு ரகசியமும் தெரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் அவளும் பிறப்பிலேயே ஒரு சுயநலவாதி. நம்மைப் போல கொள்கை கொண்டவள் தான் அவளும்... ஆனால் மல்லி அப்படி இல்லை. அவள் இயல்பாகவே சாதாரணமாக வளர்ந்த பெண். நீ சொல்வதும் சரிதான். அவள் இப்படி இருப்பது நல்லது தான். ஆனாலும் அவளுக்கு ஏதும் தெரியாது என்று அஜாக்கிரதையாக இருந்து விடாதே. பெண் புயலாக மாறி விட்டால் அப்புறம் அழிவு நமக்குத்தான். அதனால் அவள் மீதும் சந்தேகப்பார்வை வைத்துக்கொள். புரிந்ததா....

 புரிகிறது அண்ணா... நான் கவனமாக இருக்கிறேன். அது சரி... ராகவை அப்படி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே... ஏன் என்ன ஆயிற்று.

சத்யா... இவன் இப்படி வெட்ட வெளியில் நின்று கொண்டு வானத்தின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கிறானே.... அதுதான் என்னை சிந்திக்க வைக்கிறது.

சிந்திக்க வா... அப்படி சிந்திக்க என்ன இருக்கிறது அண்ணா.

இருக்கிறது சத்யா. பல கோடி கணக்கில் ரூபாயை டர்ன் ஓவர் செய்தவன் இன்று எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ரிலாக்சாக மொட்டை மாடியில் நின்று வெட்டவெளியில் வானத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறானே... இதற்கு பின்னால் ஏதாவது இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது சத்யா.

அண்ணா... அவன் நீங்கள் சொன்னதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் பின்னால் வந்திருக்கிறான். அமைதியாகவே இருந்து என்ன செய்ய முடியும். அதனால் தான் வழி இல்லாமல் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் போல.

சத்யா அவன் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று சாதாரணமாக கணக்கு போட்டு விடாதே. சிறுவயதிலேயே பல கோடி ரூபாயை கைகளில் வைத்து விளையாடி உள்ளான். பல சூட்சுமங்களை அறிந்து அவனாகவே பெரிய பிசினஸை ரன் செய்து கொண்டு

11 comments

  • Lovely update malar <br />Ragav ku ellam nabagam vanducha nadikrano<br />Kuzhi thatha epdi thapipanga waiting to reaf
  • Hahahahaha poisonous baby snakes ah 😂😂 correct than 👍 fantastic flow jeba ma'am :hatsoff: 👏👏👏👏 <br />Indha situation la kuda nama brave soul oda action semma 👌👏👏👏 but thatha sodhapitare facepalm master Raghav ena than plan pani iruparunu therinjika waiting own son illainalum prathap nallathan purinji vachi irukaru 👍 Sathya is too mean 3:) mali ivanukku nalla padam kathukodukatumm avangalukk adhukan potential irundha ivan kitta yen irukaporanga facepalm <br />Kuyili and thath's escape avangala??? Ramu ji aap kidhar ji ( enga irukinga) look forward to see what happens next.<br />Thank you and keep rocking.
  • Ungal paaratu ungal anbai velipaduthukirathu... Ungalai pontra miga sirantha author pal per irukail thangal enai utraga paduthuvathu ezhutha vaikirathu... Thank you so much Uncle
  • Wow.. story going sema interesting sis.. waiting for this epi so long... but chinna epi kuduthutinga :no: <br />Eagerly waiting for next epi.. pls post it soon :hatsoff:
  • Good morning dear Jeba! பத்து ஆஸ்கார் அவார்டு வாங்கினஆங்கில திரைப்படத்தின் தரத்தைவிட, பிரமாதமாக உள்ளது, கதையின் போக்கு! இதனை கற்பனை செய்வது என்பதே, கோடியில் ஒருவரால் மட்டுமே சாதிக்க முடியும்! அன்புள்ள ஜெபா! தாங்கள் ஒரு சாதனையாளர்! வெற்றி உங்களிடம் சரண் அடைந்துவிட்டது! உங்களைப் பிரிந்து ஒரு வினாடியும் இருக்காது! பாராட்டு!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.