சரியில்லாமல் நடப்பது போல உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் அது என்ன என்பது தெரியாமல் தன் மூளையை கசக்கி கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் குயிலிக்கு சாப்பாடு எடுத்து சென்ற ஒருவன் ஹலோ மேடம்... நேரமாச்சு, சாப்பிடுவதற்கு தயாராகுங்கள் என்று கண் மூடி படுத்து இருந்த அவளின் தோளில் தட்ட அடுத்த நொடி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் கீழே சரிந்து இருந்தான் அவன்.
கீழே விழுந்தவன் தன் மூக்கில் இருந்து ஏதோ வருவது போல தோன்ற அவன் விரல்கள் அனிச்சையாக அவன் மூக்கை தொட்டுப் பார்த்தது. இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சு என்று மேலே பார்க்க அங்கே குயிலி ஆக்ரோஷமாக அருகில் நின்ற மற்றொருவனின் கழுத்தில் தனது துப்பட்டாவைப் போட்டு நெறித்து கொண்டிருந்தாள்.
போச்சுடா... பாஸ் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று இதுக்கு தான் சொல்றது... ஜாக்கிரதையா இருங்கன்னு சொன்னாரே... ஆனால் இவ்ளோ ஜாக்கிரதை என்று சொல்லாமல் போய்விட்டாரே... அம்மாடீ ரொம்பவே அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம் போலயே.... இப்போ என்ன செய்வது என்று தெரியாமல் காப்பாத்துங்க என்று அலற அதே நொடியில் அந்த கதவை திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே வந்தாள். அவள் கையிலிருந்த கத்தி அவளது மற்றொரு கை பிடியில் இருந்த ஒரு பெரியவரின் கழுத்தில் இருந்தது.
அதைப் பார்த்ததும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து பிடித்திருந்த குயிலியின் கைகள் தானாக தளர்ந்தது. அவள் உதடுகள் துடிக்க தாத்தா என்றாள்.
அடுத்த நொடி கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்றவனும் உயிர் பிழைப்பேனா என்று நிலையிலே நின்றவனும் சேர்ந்து குயிலியின் கையையும் காலையும் கட்டி அருகிலிருந்த நாற்காலி ஒன்றோடு சேர்த்து கட்டி வைத்தார்கள்.
சில நாட்கள் கழித்து....
தாத்தா நாம எப்படியாவது இந்த அறையில் இருந்து வெளியேற வேண்டும்.
அது முடியுமா அது நடக்கிற விஷயமா...
நடக்கும் தாத்தா.. நாம் எப்படியாவது கார்த்திக்கிடம் செல்ல வேண்டும்... பொறுத்திருங்கள் என்றவள் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்.
கப்பல் பெர்முடா முக்கோணத்தை அடைய பிரதாபன் பிரசாத் இருவரும் கப்பலில் இருந்து படகில் இறங்கினார்கள். அவர்களை தொடர்ந்து ராகவ்வை இருவர் சேர்ந்து படகில் இறங்கினார்கள். படகு பெர்முடா முக்கோணப் பகுதி எல்லையின் மிக அருகில் சென்று நின்றது
தொடரும்