ராமுவையா... ராமுவை அங்கு எதற்காக அழைத்து செல்ல வேண்டும்.
காரணம் இருக்கிறது... ராகவ்வையும் ராமுவையும் வைத்துக்கொண்டு குயிலியின் பெற்றோரை மிரட்டி அனைத்து ரகசியத்தையும் பெற்றுக்கொண்டு திரும்பி விடலாம் என்று இருந்தோம். ஆனால் இந்த ராமு எங்கேயோ தொலைந்து விட்டான்.
சரி அவனை விடு இந்த குயிலி என்ன ஆனாள்.
அண்ணா... குயிலி மட்டுமல்ல... அந்த ஆசீர்வாதத்தையும் சேர்த்து நம்மாட்கள் கொண்டு வருகிறார்கள். மும்பை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம் என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் மும்பையை அடைந்துவிடுவார்கள். அங்கு இருந்து நமது பழைய குடோனுக்கு செல்ல சொல்லியிருக்கிறேன். அண்ணா இந்த போட்டோவை பாருங்கள் என்று ஒரு போட்டோவை காட்ட அதில் கைகள், கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தார் ஆசீர்வாதம்.
இதுதான் அந்த ஆசீர்வாதமா.... சரி இருக்கட்டும் அந்த குயிலி எங்கே.
அவன் மற்றொரு போட்டோவை காட்ட மயங்கிய நிலையில் அந்த புகைப்படத்தில் குயிலி படுத்திருந்தாள்.
அதைப்பார்த்ததும் பிரதாபன் முகத்தில் ஒரு கொடூர புன்னகை தோன்றி மறைந்தது. சூப்பர் சத்யா... இவர்களை நமது பழைய குடோனுக்கு கொண்டு செல்ல சொல். நாம் பெர்முடா முக்கோணம் சென்றுவிட்டு திரும்பி வந்த பிறகு இவர்களை பார்த்துக் கொள்ளலாம்.
சரி... அவர்களுக்கு போன் போட்டு குடு நான் பேசுகிறேன்.
தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தவன் நாட் ரீச்சபிள் என்றவன் மெசேஜை ஓபன் செய்து படித்தான். அண்ணா அவர்கள் மும்பையை ரிச் செய்துவிட்டார்களாம்.. நாம் சொன்ன முகவரிக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று மெசேஜ் போட்டு இருக்கிறான் என்று சொல்ல சரி அங்கு கவனமாக இருக்கச் சொல். வந்து அவர்களை பார்ப்பதாக சொல். அதோடு நாம் விடியற்காலையில் பெர்முடா நோக்கி பயணத்தை தொடர வேண்டும்.
அண்ணா...
ம்ம்ம்...
அண்ணா பெர்முடா முக்கோணத்திற்கு கப்பல் மூலமாகவே உள்ளே போகிறீர்களா...
இல்லை சத்யா பெர்முடா முக்கோணத்தின் எல்லைப் பகுதிக்கு முன்பு கப்பலை நிறுத்தி விட்டு அங்கிருந்து படகு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட மணித்துளியில் சரியாக படகின் மூலம் நாங்கள் உள்ளே செல்ல வேண்டும்.
அண்ணா... அப்படி என்றால் படகில் இறங்கும்போது ராகவ் ஏதாவது கேட்டால் நீங்கள் என்ன
Ragav ku ellam nabagam vanducha nadikrano
Kuzhi thatha epdi thapipanga waiting to reaf
Indha situation la kuda nama brave soul oda action semma 👌👏👏👏 but thatha sodhapitare
Kuyili and thath's escape avangala??? Ramu ji aap kidhar ji ( enga irukinga) look forward to see what happens next.
Thank you and keep rocking.
Eagerly waiting for next epi.. pls post it soon