"ஆங்… மயூ… நீ வானவில் ஆஃபீஸிற்கு தனியா போகாதே… நானும் வர்றேன். இந்த காலத்துல யாரையும் நம்ப கூடாது. சேஃப்டி முக்கியம்"
"அந்த எம்டியை மீட் பண்ண போறதை சொல்றியா.. அவரை தப்பா சொல்ல கூடாது. அவர் உன்னோட மாமனார் ஆகப் போறவர்ப்பா"
"இல்ல… அவரை சொல்லவில்லை.. அங்கே இன்னொருத்தன் இருந்தான்ல அவன் உன்னையே குறுகுறுனு பார்த்திட்டே இருந்தான்."
"யாருப்பா… நான் கவனிக்கலை.."
"நீ எதைத்தான் கவனிச்ச. சொன்னா கேட்டுக்கணும். ம்… அப்புறம் அந்த எம்டியை என் வருங்கால மாமனார்னு சொல்லாத… நோ… சான்ஸ்"
"அப்படி இல்லையா.."
" சைத்ருவை மெமரியிலிருந்து அழிச்சிட்டேன்.'
"எப்ப?" குறுஞ்சிரிப்புடன் மயூரி கேட்க.. கையை தூக்கி டைம் பார்த்த ஹைந்தவி,
"சரியா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கதம்...கதம்னு சொல்லிட்டேன். மனசுக்குள்ளேயே..."
"ஆல் த பெஸ்ட்.."
"எதுக்கு..?"
"அடுத்த காதல் அட்வென்சருக்கு…"
"அடிப்பாவி… இது என்ன பழி… நானே மொட்டையடிச்சு காவி உடுத்தி காசி ராமேஸ்வரம்னு போகலாமானு இருக்கேன்"
பிங்க் அரைக்கை சட்டை போட்டு காக்கி கால்சட்டை அணிந்து தரையில் ஒருகாலை ஊன்றி… மறுகாலை பல்சரில் வைத்து கம்பீரமாக நின்ற ஹைந்தவியிடம்..
" ஹாஹ்ஹாஹ்ஹா.. போலிஸ்காரம்மா காக்கியிலிருந்து காவிக்கு போறீங்களா… இந்த பர்சனாலிடிக்கு திருடனை பிடிக்கலாம்… தூக்கி போட்டு பந்தாடலாம்… மாதாஜி கெட்அப் போட கனிவான லுக் இருக்கணும். முதல்ல கடமையை செய்ங்க..அப்புறம் காசிக்கு போகலாம்.." என்று சொல்லி சிரித்தாள்.
"சிரிக்காதே நானே கடுப்பா இருக்கேன்.. " என்ற ஹைந்தவி அந்த வழியே வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள். போலீஸ்