அவ்… அதெல்லாம் அந்த சைத்ரனோட அட்வென்சர்தான்… தெரிஞ்சு கேட்கறானா..ரா.. இல்லை தெரியாம கேட்கறனா..ரா?
"சார்…"
"ஐ அண்டர்ஸ்டான்ட்…" குரலை தாழ்த்தினான்…
"இதெல்லாம் என் தம்பியோட திறமையால்தான்… சரிதானே…"
"ஆ...மாம் சார்…"
"அவன் ரொம்ப இன்டலிஜென்ட்… குட் கீப் இட் அப்"
எதை தொடரணுமாம்?
"ஓகே… இந்த சைபர் க்ரைம் கேஸ்களை கொஞ்சம் சீக்கிரம் சால்வ் பண்ணுங்க..." ஃபைலை மூடினான்..
தட்ஸ் ஆல்… நோ போலோவா… அடடா.. அவள் பெருமூச்சு விட்டாள்.
அவன் எழுந்து கதவை நோக்கி நடந்தான். சட்டென்று நின்று திரும்பினான்.
"ம்… உன்கூட இருந்த பெண் உன் சினேகிதியா… "
"யெஸ் மயூரி சார்"
"ம்… எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னா நீ மயூரியிடம் இருந்து விலகிவிடு… இட்ஸ் எ வார்னிங்" மித்ரன் சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான்.
'அண்ணனும் தம்பியும் என்னப்பா நினைச்சிட்டு இருக்கீங்க… அவங்க வீட்டுக்குள்ள வலது காலை எடுத்து வச்சு வர்றதுக்கு அவள் வராண்டாவிலேயே காத்திட்டு இருக்கறா மாதிரி அலட்டுறாங்க… அவனானால் நீ பேசினால்தான் பேசுவேன்றான்… இந்த ஆள்னா மயூரியை மறந்தால்தான் மருமகள் போஸ்டு தருவாங்களாம்… '
ஹெல் வித் தெம்… சைத்ரனை ஆறு மாதமாகத்தான் அவளுக்கு தெரியும்...ஆனால் மயூரியை இருபது வருடங்களாக தெரியும்.. யார் கண்டது அவளுடைய முதல் அடிகூட மயூரியுடன்தான் எடுத்து வைத்திருப்பாள்...அவளுக்கு நினைவில்லை… அவளை விட்டுடணுமாமே…
நெவர்… மயூரியை விட்டு ஒருநாளும் பிரியமாட்டாள். அதற்கான விலையாக அவளுடைய வாழ்க்கையே இருந்தாலும்…