தர்றது இல்லை. நல்ல பசங்க… துளசி எப்படி இருக்கா?"
"ப்ச… அவள் செத்து போயிட்டாள். அவள் கல்யாணம் பண்ணிகிட்டவன் ஒரே வருஷத்துல விட்டுட்டு ஓடிப் போயிட்டான். அவள் தனியா கஷ்டபட்டு இந்த பெண்ணை வளர்த்திருக்காள். அவள் இறந்து போய் இரண்டு வருஷமாகுது. நான் இப்பதான் நாலு மாசமா என் பேத்திகூட இருக்கேன். அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னுதான் உசுரை பிடிச்சு வச்சிருக்கேன்." அலமேலுவின் கண்களில் தெரிந்த கவலை பூரணியை கலங்க வைத்தது.
டீச்சருக்கு என்பது வயதிருக்கும். முதுமை பருவம் மட்டுமல்ல அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதையும் அவரை கடினமாக காயப்படுத்தி இருக்கிறது. பேரன் பேத்தி என்று நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில் ஒடிஞ்சு போயிருக்கார்.
மனது கலங்கியவராக சட்டென ஒரு முடிவெடுத்தார்.
"டீச்சர் கவலைபடாதீங்க… உங்களுக்கு ஒரு கவலையும் இனி இருக்க கூடாது… உங்க பேத்தி என் வீட்டு மருமகள். அவளை நான் நன்றாக… பத்திரமாக பார்த்துப்பேன்" பாட்டியின் கையை பிடித்து உறுதியாக சொன்னார்.
"நிஜமாவா…" பாட்டி திகைத்து… "ஆனால் நான் அந்த அளவிற்கு வசதியாக சீர் செய்ய முடியாது பூரணி…"
"டீச்சர்… இப்படி நீங்க பேசலாமா… என்னை வேறு ஆள்போல நினைச்சு பேசறீங்க. கஷ்டமா இருக்கு… மயூரிக்கு என்ன வேண்டுமோ அதை நானே செய்துப்பேன். நீங்க சம்மதம் தந்தால் போதும்"
இவை அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த மயூரி…
"மேடம்… ப்ளீஸ் இதைபற்றி பிறகு பேசிக்கலாம்." என்றாள்.
"பயப்படாதேம்மா… கோவில்லா வச்சு பேசியிருக்கோம். நல்லபடியா நடக்கும். வாங்க உங்களை நான் வீட்டில் ட்ராப் பண்ணிடறேன்" என்று பூரணி எழுந்தார்.
காரில் போகும்போது,
"பூரணி உங்க வீட்டுகாரர் என்ன செய்றார்?" பாட்டி கேட்க…
"வானவில்னு ஒரு பெயின்ட் கம்பெனி நடத்திட்டு வர்றார்."