"அல்லு மிஸ்தான நீங்க… " என்ற குரல் கேடடு நிமிர்ந்தார். அவருடைய மாணவிகள்தான் அவரை அல்லு என்று சொல்லுவார்கள்..
"ஆமா. நான் அலமேலுதான்… நீ… ஆங்… பூரணிதான… எப்படி இருக்கேடி?" ஆர்வமாக கேட்டார்.
அவருடைய காலை தொட்டு வணங்கி அவர் அருகில் அமர்ந்த பூரணி…
"நல்லா இருக்கேன் டீச்சர். நீங்க போட்ட பிச்சையில ஒரு குறையும் இல்லை… நீங்கதான் கம்பீரம் குறைஞ்சு போயிட்டீங்க" கண் கலங்கினார்.
"வயசானால் அப்படித்தான்… உங்க வீட்டில எல்லோரும் நல்லா இருக்காங்களா"
"நல்லா இருக்காங்க… நீங்க சேலத்துல இருந்து இங்க எப்ப வந்தீங்க. உங்களை நான் மிஸ் பண்ணிட்டேன்."
"நான் சேலத்துல இருந்து காசிக்கு போயிட்டேன். அங்க ஒரு ஆஸ்ரமத்துல இருந்தேன். எனக்கு ஒரு கடமை பாக்கி இருக்குணு தெரிஞ்சதும் இங்க வந்திட்டேன். இது என்னுடைய பேத்தி மயூரி… யார் தெரியுதா… துளசியோட பொண்ணு"
"அம்மா மாதிரியே அழகா இருக்காள்." மயூரியின் கன்னத்தை தடவி திருஷ்டி எடுத்த பூரணி சிரித்தார்.
"உங்கம்மாவோட கல்யாணத்துக்காக வச்சிருந்த நகைகளை வச்சுதான் என்னோட கல்யாணம் நடந்துச்சு… என்னோட இந்த வாழ்க்கையே உங்க பாட்டி தந்ததுதான்"
"அது ஒண்ணமில்ல செல்லம். இந்த பொண்ணுக்கு போடறதா சொன்ன பவுனை போடலைணு கல்யாணமே நிற்க இருந்துச்சு. உங்கம்மாதான் ஓடிப் போயிட்டாளா.. அந்த நகைலாம் எனக்கு எதுக்குனு பூரணிக்கு போட்டு விட்டேன். பூரணியை என்னோட பொண்ணு மாதிரிதான் நினைச்சேன்."
"ஆமாம் பக்கத்து வீடுதான் மயூரி. எப்பவும் டீச்சர் கூடவே இருப்பேன். அவங்க வீட்டுலதான் சாப்பிடுவேன்… படிப்பேன்… தூங்குவேன்…"
"பழைய கதையை விடு.நீ மும்பையிலிருந்து எப்ப வந்தே"
"பத்து வருசமாச்சு. ரெண்டு பசங்க. மூத்தவன் போலீஸ்காரன் இரண்டாவது வக்கீலா இருக்கான். எனக்கு ரொம்பவும் கவலைய