தோரணையை பார்க்கவும் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி இறங்கி பவ்வியம் காட்டினான்.
"ஆங்.. சைமன் காரேஜ்ல இவங்களை இறக்கி விட்டுரு." என்றாள்.
"அண்ணா.. சார்ஜ் எவ்வளோ?" மயூரி கேட்க,
"மேடம் தந்த சவாரி.. காசெல்லாம் வேண்டாம்மா" என்று அவன் சொன்னான்.
"ஏய்… காசு வாங்க வேண்டாம்னு சொன்னேனா… பத்திரமா இறக்கி விடு போதும். வந்துட்டான்க என்.பேரை கெடுக்கறதுக்கு " என்று ஹைந்தவி குரல் உயர்த்தினாள்
"சரிங்கம்மா… மன்னிச்சுக்கோங்க…" என்று சொன்னவன் மயூரி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு விரைந்தான்.
ஹைந்தவி வண்டியை ஸ்டார்ட் செய்யப் போகும்போதுஅலைபேசி ஒலித்தது. பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்து பார்த்தாள். அதில் சைத்ரன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உதட்டு சுளிப்புடன் மீண்டும் பாக்கெட்டில் வைத்தாள். அது அமைதியாகாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
"என்கிட்ட வாங்கி கட்டிக்காமல் விடமாட்டான் போலிருக்கு." என்றபடி அலைபேசியை எடுத்தாள்.
"என்ன…'
"நான் சைத்ரன் பேசறேன்" மறுமுனையில் பதில் வந்தது.
"தெரியுது… சொல்லு"
"என் நம்பரை ப்ளாக் பண்ணிருப்பேனு நினைச்சேன்."
"அதுக்குள்ளயா… இன்னும் எவ்வளவோ பேசணும்…"
"ஓ… தேங்க்யூ ஹைடி. அப்பா முன்னாடி உன்னிடம் சரிவர பேச முடியவில்லை… சாரி.."
"நானும்தான் … அதுக்கென்ன இப்ப பேசிட்டா போச்சு… சொல்லுங்க சார். என்ன கேஸ் விஷயமா பேசணும்?. ஹைந்தவிங்கற கேஸ் பத்தி பேசலாமா? " வார்த்தைகள் கடினமாக வந்தன.
"உன்னைப் போய் கேஸுன்லாம் சொல்லாத ஹைடி…"
"அடி பின்னிடுவேன். என் பேரை சொன்னே … தர்ற அடியில மொத்தமும் உனக்கு மறந்து போயிடும். அப்பாவுக்கு முன்னாடி பல்டி