ஆசீர்வாதம் தாத்தாவிற்கு எதுவும் புரியாமல் குயிலியை சற்று அமைதியாக இருக்கச் சொல்லி அவள் கைகளை பற்றி தடுக்க தாத்தா... இவர்கள் எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்லிவிட்டு வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுதுதான் அந்தப் பெண்மணி கம்ப்யூட்டரின் மானிட்டரை பார்க்க ஆரம்பித்தாள். குயிலியை சற்று குறைவாகவே எடைபோட்டு விட்டேனே என்றவள் வேகமாக கதவின் லாக் ஓபன் செய்வதற்கான கோடுகளை பிரஸ் செய்தாள்.
கதவு திறந்து கொள்ள உள்ளே மாட்டிக் கொண்ட அவர்கள் இருவரும் வேகமாக அந்தப் பெண்மணியை நோக்கி ஓடிவந்தார்கள்.
அதற்குள் அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த அவர் குயிலிமா.. புரிந்து கொள் உன்னை யாரும் ஏமாற்ற வில்லை... நம் நல்லதுக்காக தான் என்று சமாதானம் செய்ய முயற்சிக்க, போதும்... என்ற வகையில் அவள் தன் கையை தூக்கி காட்ட அவள் முகத்தை பார்த்த அவர் அதிர்ந்தே போய்விட்டார். இப்பொழுது அவள் இருக்கும் கோபத்தில் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது என்று தோன்ற அமைதியாக அப்படியே அமர்ந்து விட்டார். அந்த பெண்ணும் அவளோடு இருந்த ஆண்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.
அதே நேரத்தில் சத்யா... அண்ணா நில்லுங்க... ஆபத்து என்று சத்தமிட அவன் சத்தம் அவர் காதில் எங்கே கேட்கப் போகிறது.. காற்றோடு கலந்து மறைந்தது.
பிரதாபன் பிரசாத் ராகவ் மூவரும் இருந்த படகு அலைகளை கிழித்து கொண்டே முன்னேற அந்த ராட்சத அலையின் வேகம் தாங்காமல் துண்டு துண்டாக அவர்கள் முன்னே நொருங்கி சிதறியது...
தொடரும்