முகமெல்லாம் வேர்த்து வடிய மூச்சு வாங்க அமர்ந்திருந்த தந்தையை பார்த்து பதைத்தபடியே கேட்டாள் லக்ஷ்மி...
“என்னனு தெரியலடி லக்ஷ்மி... லேசா வயத்த சுருட்டி சுருட்டி வலிக்கறது... சேப்பங்கிழங்கு சாப்டது ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்... நேக்கு கொஞ்சம் பெருங்காயம் போட்டு மோர் தாயேன்...”
“ரொம்ப கொஞ்சமத்தானேப்பா சாப்ட்டேள்.... இருங்கோ மோர் கொண்டு தரேன்... கொஞ்சம் வெந்தயமும் தரேன்... வாய்ல போட்டுண்டு மோரை குடிங்கோ... வலி குறையறதான்னு பார்க்கலாம்...”, லக்ஷ்மி சென்று மோரை கலக்கி வெந்தயத்துடன் வர, ரங்கன் நாற்காலியில் மூச்சு பேச்சின்றி கிடந்தார்....
“திவ்யா என்ன பண்ணிட்டு இருக்க...”
“இப்போதான் சாப்பிட்டு முடிச்சேன்... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...”
“வேலை இப்போதான் முடிச்சேன் திவ்யா....”
“அப்பறம் கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு... மீதி இருக்கற பர்ச்சேஸ் எப்போ பண்ண ஆரம்பிக்க போறீங்க...”
“அதுதான் தெரியலை குமார்... எல்லா கடையும் மூடி இருக்குது... எப்போ திறப்பாங்க தெரியலை...”
“கடைக்கு போக முடியலைனாலும் ஆன்-லைன்ல யாச்சும் வாங்கிடுங்க திவ்யா... எங்கம்மாக்கிட்ட போராடித்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி இருக்கேன்... இதுல சீர் வரிசலையும் பிரச்சனைனா அவ்வளவுதான்... கல்யாணத்தை நிறுத்த கூட தயங்க மாட்டாங்க... என்னாலையும் அம்மா, அப்பாவை ரொம்ப எதிர்த்து பேச முடியாது...”
“நீங்க பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா குமார்... என் பின்னாடி துரத்தி துரத்தி காதலிக்கும் போது நீ மட்டும்போதும், நீ கிடைக்கலைன்னா உயிரோடவே இருக்க மாட்டேன்னு அத்தனை பேச்சு பேசினீங்க... இப்போ சீர்வரிசை வைக்கலைன்னா கல்யாணம் நின்னும்டும்ன்னு சொல்றீங்க... உங்களை காதலிச்சதால எங்கம்மாவும், அப்பாவும்தான் இப்போ கஷ்டப்படறாங்க...”
“என்னை காதலிக்கலைன்னா உனக்கு கல்யாணமே பண்ணாம உங்க வீட்டுல வச்சிருப்பாங்களா... இல்லை எந்த செலவுமே பண்ணாம இலவசமா உன்னைய யாரானும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்து நின்னுருப்பாங்களா... என்னவோ என்னை கல்யாணம் பண்ணுறதாலதான் உங்க வீட்டுல செலவுன்னு சொல்ற...”
“உங்களை காதலிக்கலைன்னா எங்க வசதிக்கு ஏத்த மாதிரி வரதட்சனை சீர் செனத்தி அதிகம்