அவளுக்கோ இதயம் தாறுமாறாக துடிக்க... உடல் நடுங்க படபடக்கும் கண்களுடன் அவனை ஏறிட்டாள்.
அவன் மது உண்ட வண்டுபோல் அவள் முகத்தை நோக்கி குனிந்தான்.
அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் வீச... கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.
இருவரது அதரங்களுக்கு இடையே நூலிழை தொலைவு இருக்கும் தூரத்தில்,
எங்கோ ஒலித்த வண்டியின் ஹாரன் சத்தத்தில் இருவரின் மோன நிலையும் கலைய,
அடுத்த நொடி தீச்சுட்டார் போல் அவளை தள்ளி விட்டான்.
அவன் தள்ளியதில் நிலைகுலைந்தவள் கீழே விழ........
அதனைப் பொருட்படுத்தாதவன் இருக்கையினை விட்டு எழுந்து ஜன்னலருகே திரும்பி நின்று கொண்டான்.
கீழே விழுந்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் விறுவிறுவென்று வெளியே சென்று விட்டாள்.
நடந்து முடிந்த இச்சம்பவம் இருவரையும் தாக்கியது.
அவள் தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள். ஐயோ... ஐயோ... என்ன பண்ணி வச்சிருக்க... இதுக்கு மேல அவரு மூஞ்சில எப்படி முழிப்பேன். கடவுளே... அவளுடைய பதற்றம் இன்னும் நீங்கவில்லை' நடுங்கிய நிலையிலே இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
அவன் சென்றவுடன் தன் இரு கைகளால் தலையை இறுக்கமாக பிடித்தவன் தன்னிலை பெற நிமிடங்கள் ஆனது. பெருமூச்சுவிட்டு நிமிர்ந்தவன் தண்ணீரை எடுத்து அருந்தினான் அதில் ஆசுவாசம் வர பெற்றவனாய் ரிசீவரை எடுத்து அவளை அழைத்தான்.
அவளது நிலை தான் கவலைக்கிடமாக இருந்தது அவனை நிமிர்ந்து பார்க்க அவளால் கண்டிப்பாக முடியாது. இந்நிலையில் எப்படி??? கடவுளே நீதான் காப்பாத்தணும் என்று வேண்டிக் கொண்டு அவனது அறையை அடைந்தாள்.
அவன் எதுவும் நடவாதது போல, எப்பொழுதும் இருக்கும் கம்பீரதோரணையுடன் அவளை எதிர் கொண்டான்.
(இவனால் மட்டும் எப்படி இப்படி நிமிடத்திற்கு நிமிடம் முகத்தை மாற்ற முடிகிறது. சரியான அழுத்த காரன்)
அவனை மனதில் செல்லமாக வைத்தவள் அவன் முன் நின்றாள்.
அவன் சைன் பண்ணிய பேப்பரை நீட்டியவன். அவள் அதனை ஏறிடும் முன்பே அடுத்த ஃபைலை நீட்டினான். இந்த ஃபைல் செக் பண்ணி... அசெம்பிள் பண்ணிடுங்க.
ஒகே சார்...என்று அவள் திரும்ப,