பத்து நிமிடத்தில் கம்பெனி அடைந்தவன்.கதிர் அவனது ரூமில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து, என்னடா ஆச்சு எதுக்கு இவ்ளோ டென்ஷன்.
நீ எங்க போன....
உனக்கு என்ன ஆச்சு அத முதல்ல சொல்லு.
ஒன்னும் இல்லையே இந்த கொட்டேஷன் நீதான பாத்துக்குற அதை ரெடி பண்ண தான் கூப்பிட்டேன்.
கார்த்திக் சந்தேகப் பார்வையுடன், இதுக்குத்தான் இவ்வளவு அவசரமாக கூப்பிட்டியா.
ஆமா வேற எதுக்கு...
ஓகே..அனிதாவை கொஞ்சம் கூப்பிடுறியா.. சில டீடெயில்ஸ் அவங்க கிட்ட தான் கேக்கணும்.
நீயே கூப்புடு,
ஏன் நீ கூப்பிட்டா குறைஞ்சிருவியா, கொஞ்சம் ஓவரா தாண்டா போயிட்டு இருக்க...
ரிசிவரை எடுத்து அனிதா என்று சொல்ல.... எதிர்முனையில் சார் அனிதா மேம் ஹாஃப் டே லீவ் சொல்லிட்டு போயிட்டாங்க சார்.
ஓகே...... சொல்லி ரிசீவரை வைத்தவன் கதிரை கூர்மையான விழியுடன் நோக்கினான்.
அவனுக்கும் அனிதாவை பார்க்கவேண்டும் போல தான் இருந்தது. அதற்காகத்தான் கார்த்திக் மூலம் பார்த்துவிடலாம் என்று நினைத்தான். இப்பொழுது கார்த்திக்கின் பார்வை தன்னை நோக்கிப் பாய்வது உணர்ந்தவன். அவனை நேர்பார்வை பார்க்க முடியாமல், என்னடா என்று சிறு தடுமாற்றத்துடன் கேட்டான்.
அனிதாவ என்ன பண்ண.....
அவன் முகம் குப்பென்று வியர்த்துவிட்டது நா...... நா என்று தொண்டையை சரி செய்து கொண்டவன். நான் ஒன்னும் பண்ணலயே.....
அப்புடியா....
ம்ம்....
அப்புறம் எதுக்கு அனிதா ஆஃப் டே லீவ் சொல்லிட்டு போனாங்களாம்,
முகத்தை கடுமையாக மாற்றியவன். எவ்ளோ தைரியம் இருந்தி என் பெர்மிஷன் இல்லாம போயிருப்பா.....
ஷட் அப் கதிர்...
நீ ஏன் அனிதா கிட்ட இப்புடி பிஹேவ் பண்றனு எனக்கு தெரில.
எப்படி பிஹேவ் பண்றேன்.
அது உனக்கே தெரியும்டா... நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன். இப்புடி அரகண்ட்