ஐயா.... சாமி.... உனக்காவது இந்த அப்பத்தாவோட பாசம் புரிஞ்சுதேயே.......... எனக்கு ரொம்ப சந்தோசம்ப்பா..... எனக்கு என்னோட கொள்ளு பேரனை பார்க்க கூட ஆசை இல்லப்பா..... உங்க அப்பன் கையால கொல்லி வாங்கிட்டு போன அதுவே போதும்பா.....
என் கண்ணு முன்னாடியே என் புள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா.... அதை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்லை..... உன்னையும் உங்க அம்மாவையும் கை எடுத்து கும்பிடுறேன் என் பையன் சோமுவை காப்பாத்தி கொடுத்துடுங்க.... என்று கூறியவாறு அழுது கொண்டேயே அந்த அறையை விட்டு வெளியேறினார்.
தனது மகனின் தோளை தொட்ட பார்வதி .... அத்தை சொல்றதுக்காக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத ஆதி. அது உன் வாழ்க்கையை நரகமாக்கிடும் ........ பொறுமையா இரு. கண்டிப்பா உங்க அப்பாக்கு எதும் ஆகாது.எனக்கு நம்பிக்கை இருக்கு.
தனது தாயை நிமிர்ந்து பார்த்த ஆதி..... அம்மா எனக்காக நீங்க இனி அப்பத்தாகிட்ட திட்டு வாங்காதீங்க.... அதும் இல்லாம அப்பத்தா சொல்றது தான் சரி. நமக்கு இப்ப முக்கியம் அப்பா உயிர் தான்.
என்னால தான் அப்பா இப்படி ஆகிட்டாரு.... எனக்கு ஜாதகத்து மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. அஞ்சு வருஷமா நம்மாலும் எவ்ளோவா டாக்டர்ஸ் யா பார்த்தாச்சு.... அப்பாவோட உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
இதுக்கு மேல நாமா கடவுளாத் தான் நம்பி ஆகணும். நான் அப்பத்தா சொல்றதை கேட்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..நான் அப்பத்தா பார்த்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன் ..... அப்பத்தா சொன்னபடி என் மனைவியை வச்சு குலதெய்வ பூஜையை நடத்தலாம். அதனால, ஒரு வேளை அப்பாக்கு உடம்பு சரியாகிட்ட அதுவேயெ எனக்கு போதும்.
நான் ஒருத்தன் செஞ்சா தப்புக்காக நம்ம வீட்டோட நிம்மதியே போய்டுச்சும்மா என்று வருத்தத்துடன் கூறினான்.
தனது மகனின் கையை ஆறுதலாக அழுத்திய பார்வதி. ஆதி இப்ப நீ உன் அப்பாக்காக இந்த கல்யாணத்திற்கு ஒற்று கொண்டால்...... நாளை ஒருவேளை, அகிலா திரும்பி வந்தாள் நீ அவளுக்கு என்ன பதில் சொல்லுவாய்?????
இதுவரை அமைதியாக வேதனையுடன் தாயின் வார்த்தைகளை கேட்டு கொண்டு இருந்த ஆதி..... இப்பொழுது நெருப்பை கக்கும் எரிமலையை தனது கண்களில் கொண்டு வந்து இருந்தான். அவனது ஆறடி உயர உடம்பு விறைத்தது. கை முஷ்டிகள் இறுகி கொண்டன.
அ கி லா என்ற வார்த்தையை நிறுத்தி நிதானமாக உச்சரித்தான். அந்த அறையே அதிரும்