ஜெயிலில் இருந்து வந்து இருக்கான். ஒரு மாசம்தான் ஆகுது. அவனதான் எனக்கு பாத்திருக்காங்க. இதெல்லாம் எதுக்கு பண்றாங்கன்னு பார்த்தா என்னோட சொத்துக்காக இந்த நாடகம், கேட்கவே வேடிக்கையா இருக்கில்ல கதிர். இவை அனைத்தையும் கூறும் போது அவள் கண்களில் துளி கண்ணீர் இல்லை. அவள் குரலில் நடுக்கம் இல்லை. அதற்கு மாறாக உதட்டில் ஒரு கசந்த புன்னகை.. வெறுமையாக வந்து ஒலித்தது அவள் வார்த்தைகள்.
அவங்கள எதிர்த்துப் பேச எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா தனியா இருக்கேன்னு தெரிஞ்சு பிரச்சனை நிறைய எழுப்பி விடுவாங்க கதிர். பயப்படுறியான் நீங்க கேட்கலாம். இதுக்கு பேர் பயம் இல்ல கதிர். மீதி வாழப்போற வாழ்க்கை அட்லீஸ்ட் நிம்மதியாக வாழனும்ல கதிர். என்னால இதுக்கு மேல அங்க போக முடியாது கதிர்..... நீங்க என்னை கூட்டிட்டு போவிங்களா???
கதிரின் பதில்??????
தொடரும்