உங்களுக்கு ஏதாவது ஆகி இருக்குமா பாட்டி???? என்று குழந்தை தனத்துடன் அவரிடமேயே திருப்பி கேட்டாள் .
அந்த குட்டியின் பாசத்தில் உருகியவர் இல்லைடா கண்ணு.... எனக்கு தான் ஒண்ணும் ஆகமா நீ பார்த்துக்கிட்டியே அப்புறம் என்ன???? இப்ப பாட்டிக்கு எல்லாம் சரி ஆகிடுச்சு ..... Now, I Feel Very Strong.....என்று கூறி அந்த குட்டியை தனது மடியில் உட்காரவைத்து முத்தம் ஒன்றை அந்த பட்டு கன்னத்தில் வைத்தார்.
தனது அன்னையை தவிர அந்த குட்டிக்கு யாரும் இதுவரை இந்த மாதிரி அன்புடன் முத்தம் கொடுத்தது இல்லை. அதனால், அந்த குட்டிக்கும் பெரியவளின் முத்தம் பிடித்து இருந்தது.
அம்மா..... என்ற குரலில் திரும்பி பார்த்தவர் அங்கு ஆதி கவலையுடன் நிற்பதை கண்டவர்.
எனக்கு ஒண்ணும் ஆகலை ஆதி..... லோ பிரஷர் தண்ணி குடிக்கணும் போல இருந்துச்சு... அவ்ளோ தான் ..... இதோ இந்த தங்கக்குட்டி தண்ணி கொடுத்த எல்லாம் சரி ஆகிடுச்சு. என்று மீண்டும் தன் மடியில் இருந்த மழலையிடம் செல்லம் கொஞ்சினார்.
சாரி.... மா எதோ டென்ஷன் லா.... கார்லா தண்ணி இருக்க இல்லையான்னு கூட செக் பண்ண மறந்துட்டேன் சாரி.... உங்களுக்கு மட்டும் எதாவது ஆகி இருந்த என்று கூறும் போதேயே அவனது கண்கள் கலங்கி விட்டது.
அவனது பாசத்தில் உள்ளம் நெகிழ்ந்தவர்...... ஒரு சிறு விஷயத்திற்கேயே கண் கலங்கும் இவனா???? தவறு செய்து இருப்பான். அப்படி நடந்து இருந்தாலும் இந்நேரம் கண்டிப்பாக என்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்டு இருப்பான்.... இவனிடம் எப்படி ஜோசியர் கூறியதை கேட்பது???? என்று மனதில் நினைத்தார்.
அங்கிள்......இவ்ளோ உயரமா இருந்துட்டு அழகுறீங்க......shame Shame Puppy Shame என்று கை தட்டினால் அந்த குட்டி.....
இப்பொழுது தான் ஆதி அவளை உற்று கவனித்தான். அவள் சிரிக்கும் போது அவளுக்கு போட பட்டு இருந்த குட்டி பொன்னிடைல் அழகாக அசைந்தது. கன்னத்தில் சிறு குழியும் வந்து சென்றது. நேற்று பூத்த ரோஜா பூ போல சிவப்பு நிறத்தில் அழகாக இருந்தாள்.
கண்களை துடைத்து கொண்டவன்.... ஹோய் குட்டி நான் எங்க அழுதேன்.... நான் அழலையே என்று பொய் உரைத்தான்.
சீட்டிங் அங்கிள்.... நீங்க அழுந்திங்க நான் பார்த்தேன். என்றால் கோபமாக..... அவள் பேசும் போது இடையிடையே ஆங்கிலம் பேசுவது அவனுக்கு சிரிப்பாக இருந்தது. அவள் பேசுவது சரியாக இருந்தாலும்.... அவளது குரலுக்கு வேறு விதமாக இருந்தது....அதிலும் ஒரு வகை இனிமை இருக்கத்தான் செய்தது.
தொடர்ந்து அவன் இல்லை என்று மறுக்கவும்..... பாட்டி, என் அம்மா பொய் சொல்றது