ஓகே அபிக்குட்டி என்று பார்வதி அம்மாளும் அந்த குட்டியை கட்டி கொண்டார். ஏனோ அபியுடன் இருக்கும் நேரம் மற்ற இருவர் நெஞ்சிலும் ஒரு வித அமைதி ஏற்படுவதை இருவரும் உணர்ந்து இருந்தனர்.
ஆதியின் கார் ஒரு அழகிய சிறிய வீட்டின் முன் நின்றது. ஊரை விட்டு சற்று ஒதுங்கி அமைதியாக இருந்தது அந்த வீடு.
வீட்டின் இருபுறமும் அழகிய ரோஜாக்கள் பூத்து குலுங்கின.
"உன் கன்னம் ரோஜா பூ மாதிரி அவ்ளோ சாப்ட் பேபி.... என்னால தொடமா இருக்க முடில.... ப்ளீஸ் இங்க வா டியர் "
ரோஜாக்களை கண்டதும்..... ஆதிக்கு அகிலாவுடன் இருந்த நாட்கள் கண் முன் வந்தது. அவள் ரோஜாவை போன்று மென்மையானவள் அல்ல.... ரோஜாவில் இருக்கும் முட்களை போன்றவள் என்று மனதில் நினைத்தான்.
அவனது மனதை அறியாத அபியோ அவனது கைகளை பிடித்து ஆட்டினாள். அங்கிள்.... என்னை தூக்குங்க... பாட்டிக்கு உடம்பு சரி இல்ல லா.... என்று ஆதியை நோக்கி தனது இரு கைகளை விரித்தாள்.
அவளது செய்கை ஆதிக்கும் மகிழ்ச்சியை தந்தது. இதற்கு முன் இது போல குழந்தைகளை தூக்கி அவனுக்கு பழக்கம் இல்லை. ஆனால், அபியை தூக்குவது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அழகிய மலர் செண்டு போல இருந்தவளை அழகாக தூக்கி கொண்டு அந்த வீட்டின் காம்பௌண்ட்யில் நுழைந்தான்'.
அந்த வீட்டை அழகாக பிரித்து இருந்தனர். ஒன்று வீடாகவும் மற்றொன்று கிளினிக் போன்று சிறிதாக இருந்தது. அதில் ஈஸ்வரி மருத்துவமனை என்று பெயர் பலகை இருந்தது.
கிளினிக்கின் உள்ளே சில சத்தங்கள் கேட்டது. ஆதி அவனது அன்னையை மருத்துவரிடம் காட்ட நினைத்தான். அப்படியே, அபியின் தாயிடம் பர்வதம் அம்மாளுக்கு தங்குந்த நேரத்தில் அபி தண்ணீர் கொடுத்து கைப்பற்றியதை கூறி நன்றி கூற நினைத்தான். ஏனோ, அபியின் தாயை காண வேண்டும் என்ற ஆர்வம் அவன் மனதில் அதிகமானது.
கிளினிக்யில் வேலை செய்யும் ஆயா அவர்களை நோக்கி வந்தார்.
பாப்பா.... யாரு பாப்பா இவங்க???? என்று அபியிடம் கேட்டாள்.
ஆயா.... இந்த பாட்டியை ஸ்கூல் விட்டு வரும் போது பார்த்தேன்.... பாவம் இவங்களுக்கு உடம்பு சரி இல்ல. கொஞ்ச நேரம் முன்னாடி மயங்கிட்டாங்க.....அதான், அம்மவா பார்க்க இந்த அங்கிள் கூட்டிட்டு வந்தாங்க என்று ஆதியை காட்டினாள்.
அப்படியா..... இங்க உட்காருங்க....டாக்டர் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன். என்றபடி