போய்டு".....
'மனகெட்டவளேயே..... வெளிய போ.... உன்னால நம்ம குலத்துக்கேயே அசிங்கம் வெளிய போடி"
"நம்ம கல்யாணத்துக்கு உன் வயித்துல இருக்குற புள்ளத்தான் பிரச்சனைன்னா அதை கொல்ல கூட தயங்கமாட்டேன் ஞாபகத்துல வச்சுக்கோ"
மூன்று விதமான குரல்கள் ஈஸ்வரியை நிலைகுலைய செய்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள்.... பார்வதி அம்மாள் முன்பே கால் மீது கால் போட்டவாறு ஆதியை நிமிர்ந்து திமிராக பார்த்தாள்.
அபி இங்க அம்மாகிட்ட வா என்றாள். ஆதி அபியை இறக்கி விடாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். அபியும் அவனது கை வளைவில் இருந்து கொண்டே
அங்கிள்.... இவங்க தான் என்னோட மாம்.... ஈஸ்வரிஅம்மா என்றாள்
ஈஸ்வரி யா????? என்று சந்தேகத்துடன் கேட்ட ஆதிக்கு..... எஸ் ஈஸ்வரி..... அகிலாண்டேஸ்வரி என்று அகிலா திமிராக பதில் அளித்தாள். என் அண்ணன் எனக்கு வச்ச பெயர் என்றாள்.அவளது பதில் ஆதிக்கு மேலும் கோபத்தை முட்டி அவனது கை முஷ்டிகளை இறுக்கியது.
தொடரும்