தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று 1001 வது முறை நினைத்துக் கொண்டாள்.
இருவரும் சென்று இறங்கியது ஒரு பிரபலமான முருகன் கோவில். அங்கு அவனுடைய நண்பர்கள் நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவர்களை வரவேற்று சன்னிதானத்திற்கு அழைத்து சென்றனர்.
எல்லாம் ஓகே தான மச்சி.
ஓகே தான் டா ஒன்பதரைக்கு முகூர்த்தம் இருக்காம் பரவால்ல நீங்க ஒன்பதே கால்- கே வந்துட்டிங்க.
தர்ஷினியின் முகம் சோகமாக இருப்பதை கண்டு அவனுடைய நண்பர்கள் சிஸ்டர் கவலைப்படாதீங்க சிஸ்டர் எல்லாம் நல்லபடியா நடக்கும்.
ரொம்ப தேங்க்ஸ்.
தேங்க்ஸ்லாம் சொல்லாதீங்க சிஸ்டர். கல்யாணம் முடிஞ்சு. விருந்துக்கு ஒவ்வொருநாளும் எங்களோட வீட்டுக்கெல்லாம் வந்துருங்க.
அவன் சிறு சிரிப்புடன் சரிங்க பிரதர் என்று கூறினாள்.
அதற்குள் ஐயர் அழைக்க ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தது.முருகனை தரிசித்து விட்டு மணமகன் மணமகள் இருவரும் ஹோமத்தில் அமர்ந்தனர்.
அனைத்து பூஜைகளும் சிறப்பாக முடிய கதிர் பிரியதர்ஷினியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்.
தொடரும்