“அப்ப...நான் வெய்ட் பண்ணி அவங்களையும் மீட் பண்ணிட்டே போறேன்!” சொல்லி விட்டு ஏ.சி.தீனதயாள் திரும்ப
பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி எதையோ சொல்லுவது போல் வந்து நின்றான்.
அவனிடமிருந்து நிச்சயம் ஏதாவதொரு நல்ல தடயம் கிடைக்கும் என்று நம்பிய தீனதயாள் “என்னப்பா?...என்ன விஷயம்?..ஏதோ சொல்ல வர்றே போலிருக்கு!” என்று கேட்டார்.
“ஆமாம் சார்!” என்று சொல்லி விட்டு அவன் சாம்பசிவத்தைப் பார்த்து மென்று விழுங்க புரிந்து கொண்ட தீனதயாள்
“வாப்பா...அப்படித் தள்ளிப் போய்டுவோம்!” என்று சொல்லி அவனை அங்கிருந்து நகர்த்திச் சென்று கேட்டார். ”ம்...இப்பச் சொல்லு!”
“சார்...இதுதான் முதல் தடவைன்னு நினைக்காதீங்க...இந்தக் காம்ப்ளக்ஸ்ல ஏற்கனவே ரெண்டு தடவை இது மாதிரி நடந்திருக்கு!...இது மூணாவது தடவை!”
“இஸிட்?”
“ஆமாம் சார்!...மொதல்ல ஒரு வாட்ச்மேனை இவங்களே சம்பளம் குடுத்து வேலைக்கு வெச்சிருந்தாங்க...அவன் மேலே வாட்டர் டேங்க்ல பொணமா மிதந்தான்!...சத்தமில்லாம் அவன் குடும்பத்துக்கு ஒரு தொகையை நஷ்ட ஈடாக் கொடுத்து அதை “விபத்து”ன்னு காட்டி முடிச்சிட்டார் பில்டிங் ஓனர்!” சொல்லி விட்டுத் திரும்பி அந்த சாம்பசிவத்தைப் பார்த்தான் அவன்.
“ஓ....அப்புறம்?” கேட்ட தீனதயாள் மெல்லத் திரும்பி எதேச்சையாய்ப் பார்ப்பது போல் சாம்பசிவத்தை நோக்கினார்.
அவர் “திரு...திரு”வென்று ஆடு திருடின கள்ளனைப் போல் விழித்துக் கொண்டிருந்தார்.
“அப்புறம்...ரெண்டாவதா ஒரு வாட்ச்மேனையும் இவங்களே வேலைக்கு வெச்சாங்க!...அவன் வந்த ஒரே வாரத்துல பைத்தியமாயிட்டான்!...அதுக்கப்புறம்.. “சரி...இதெல்லாம் சரிப்பட்டு வராது”ன்னுட்டு பில்டிங் ஓனர் “எக்ஸ்-ரே செக்யூரிட்டி சர்வீஸ்”க்குப் போனாரு!...இப்ப அதன் மூலமா வந்த ஆளும் போயிட்டான்!” சொல்லும் போதே அந்த செக்யூரிட்டியின் கண்களில் ஒரு வித பீதி தெரிந்தது.
“இதுக்கெல்லாம் யாரு காரணம்னு நீங்க நெனைக்கறீங்க மிஸ்டர்......ம்ம்...உங்க பேரு என்ன சொன்னீங்க?”
“சுந்தரம் சார்!”
“ம்...சுந்தரம்!...சொல்லுங்க சுந்தரம்.....இது திருட வர்ற ஆளுங்களோட வேலையா?...இல்லை...காம்ப்ளக்ஸ் ஓனருக்கு வேண்டாதவங்க யாராச்சும் செய்யுற