வேலையா?” தீனதயாள் அவன் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைகளில் தனக்கு ஏதாவதொரு தடயம் கிடைக்காதா? என்கிற எதிர்பார்ப்பில் கேட்டார்.
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த அந்த செக்யூரிட்டி “சார்...நான் சொன்ன நீங்க நம்ப மாட்டீங்க!...ஆனா...அதுதான் உண்மை!” என்றான் தணிவான குரலில்.
“மொதல்ல சொல்லுங்க சுந்தரம்...அதை நம்பலாமா?..வேண்டாமா?...ன்னு அப்புறம் சொல்றேன்!”
“வந்து...வந்து...இந்தக் காம்ப்ளக்ஸ்ல ஏதோ ஒரு அமானுஷய சக்தி இருக்குது சார்...அதுதான் இந்தச் சாவுகளுக்கெல்லாம் காரணம்!” என்று அந்த செக்யூரிட்டி சொல்லி வாய் மூடவில்லை
மேலே மரக்கிளையிலிருந்து ஏதொவொன்று அவன் தோள் மீது விழுந்து தெறித்துப் போய் தூர விழுந்தது.
சட்டென்று ஓரடி நகர்ந்தவன் திகிலுடன் அதை உற்றுப் பார்த்து விட்டு “ச்சை!...ஆந்தை ரெக்கை!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு தைரியமானான்.
தொடரும்...
Next episode will be published on 2nd Feb. This series is updated weekly on Tuesdays.