தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 02 - முகில் தினகரன்
அந்த செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டதும் மெல்லிய குறுஞ்சிரிப்புடன் அவனையே கூர்ந்து பார்த்த தீனதயாள் “யூ...மீன்...பேய்!....அதானே?” கேட்டார்.
“ஆமாம் சார்!...ஆமாம்!...இந்த பில்டிங்ல பேய்...இல்லை....இல்லை...பேய்கள் இருக்குதுக சார்!” குரலில் ஒரு அழுத்தம் இருந்தது.
தொடர்ந்து அவன் கண்களையே உற்று நோக்கியபடி “நீ பார்த்திருக்கியா?” கேட்டார்.
“இல்லை சார்!” தலையை இட வலமாய் ஆட்டிக் கொண்டே சொன்னான்.
“அப்புறம்?”
“உணர்ந்திருக்கேன் சார்!...ஒரு தடவை ரெண்டு தடவை அல்ல...பல தடவைகள்!...சரியா ராத்திரி ஒன்றரை மணிக்கு அதுக சேட்டை பண்ண ஆரம்பிச்சிடும்க!” இப்போது அவன் குரலில் நடுக்கம் இருந்தது.
“என்ன சேட்டை பண்ணும்க?” தீனதயாள் தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டார்.
“திடீர்...திடீர்ன்னு காம்ப்ளக்ஸுக்குள்ளார யாரோ ஓடுற மாதிரி “திமு...திமு”ன்னு சத்தம் கேட்கும்!...மொட்டை மாடியில் யாரோ நிக்கற மாதிரி உருவம் இருட்டுல தெரியும் டார்ச் அடிச்சுப் பார்த்தா இருக்காது!...அப்புறம்...முக்கியமா...முக்கியமா...”
“சொல்லுங்க...முக்கியமா...?”
“பிணம் எரியுற வாடை!...முடி பொசுங்குற நாத்தம்!...தோல் தீயுற நெடி!...தெனமும் ராத்திரி ஒரு மணிக்கு வீசும்!...அந்த நாத்தத்தை இப்ப நெனச்சாலும்...வாந்தி வர்ற மாதிரி இருக்குது சார்...அப்பப்பா...கொடலைப் புடுங்குற நாத்தம்!”
“ஓ.கே...சுந்தரம்...நீங்க சொல்றதையும் மனசுல வெச்சுக்கறேன்!...இப்ப....நீங்க...போகலாம்!” என்று சொல்லி அந்த செக்யூரிட்டியை அனுப்பி விட்டு காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவத்திடம் வந்தார் தீனதயாள்.
“என்ன மிஸ்டர் சாம்பசிவம்...உங்க அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் வந்துட்டாங்களா?”
“இப்ப வந்துடுவாங்க சார்!...வாங்க சார்...அங்க...ஆபீஸ் ரூம்ல போய் உட்காருவோம்!” சொல்லி விட்டு அந்த சாம்பசிவம் முன் நடக்க அவரைப் பின் தொடர்ந்து நடந்தார் ஏ.சி.தீனதயாள்.
*****
அந்த ஆபீஸ் ரூம் சிறியதாக இருந்தாலும் குளிரூட்டப்பட்டு கச்சிதமாயிருந்தது. பத்துக்குப் பத்து அறைக்குள் இரண்டு மேசைகள் ஒரு டீப்பாய் ஒரு விசிட்டர்ஸ் சோபா கிளாஸ் பீரோ என நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
தன் இருக்கையில் அமர்ந்த சாம்பசிவம் எதிரிலுள்ள நாற்காலியில் ஏ.சி.தீனதயாளை