குறுஞ்சிரிப்புடன் சாம்பசிவத்தின் பக்கம் திரும்பிய ஏசி “ஓ.கே!...இந்தக் கேஸ் சம்மந்தமா ஏதாவது என்கொயரி இருந்தா...வருவேன்...ப்ளீஸ்...கோ-ஆபரேட்!” சொல்லி விட்டு எழுந்து வேக வேகமாய் வெளியேறினார் ஏ.சி.தீனதயாள்.
காரில் ஏறப் போன ஏ.சி. சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த அந்தப் பக்கத்து பில்டிங் வாட்ச்மேனை அருகில் அழைத்தார்.
அவன் வந்ததும் “இன்னிக்கு...நைட் டியூட்டில இருப்பியா?”
“ம்...இருப்பேன் சார்!”
“ஓ.கே!...சரியா ஒரு மணிக்கு நான் இந்தப் பக்கம் வர்றேன்!...பார்த்துடலாம் அந்தப் பேயை!”
“வாங்க சார்!” சந்தோஷமாய்ச் சொன்னான் அந்தச் செக்யூரிட்டி.
“ம்ம்ம்...நான் வர்ற விஷயம்...இப்போதைக்கு உங்களையும் என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாது!...ஒருவேளை விஷயம் லீக் ஆயிடுச்சின்னா...நிச்சயமா அது என்னால இருக்காது!...அப்ப உன்னாலதான்னு உறுதியாயிடும்!...அப்படி உறுதியாயிடுச்சின்னா...அப்புறம் உனக்கு லாடம்தான்!...ஸோ...ரகசியமாவே வெச்சிரு!...யாருகிட்டேயும் வாய் விட்டுடாதே!...என்ன...புரிஞ்சுதா?”
தலையாட்டியவனை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சென்றார் ஏ.சி.தீனதயாள்.
இவருடைய திருமணமே ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், வித்தியாசமாகத்தானே நடந்தது. அப்போது அவர் இன்ஸ்பெக்டர்.....
*****
வழக்கம் போல் சினிமா பாடலை முணுமுணுத்தவாறே தன் புல்லட்டில் பறந்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் தீனதயாள். சாலை மிகவும் அமைதியாக கூட்ட நெரிசலின்றி இருக்க அவரது வாகனத்தின் வேக முள் அறுபதிற்கும் எழுபதிற்கும் இடையில் ஆடிக் கொண்டிருந்தது.
கறுப்புக் கண்ணாடிக்குள் பதுங்கியிருந்த அவரது கண்கள் தொலைவில் தெரிந்த அந்தக் காட்சியைக் கண்டுவிட ஒரு விநாடி குழப்பத்திற்குள்ளாகி பிறகு சட்டென நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்டார். தலைவிரி கோலத்துடன் ஒரு இளம்பெண் சாலையை ஒட்டிச் செல்லும் அந்த ரயில் தண்டவாளத்தில் ஓடிக் கொண்டிருந்தாள். எதிரே எக்ஸ்பிரஸ் ரயில் அவளைச் சாய்க்கும் ஆவலுடன் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
சடாரென்று வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தி அப்படியே தரையில் சாய்த்து விட்டு