(Reading time: 11 - 21 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

காத்திருந்தான். வெகுநேரமாகியும் அவள் வராததால் எங்க போய்ட்டாங்க என்று அவளை தேடி இவன் வாசல் வர,

         அங்கு அவன் தேவதை சிவப்பு நிற காட்டன் புடவையில் கழுத்தில் புது மஞ்சள் தாலி பளபளக்க.... நெற்றியில் வியர்வை பூக்க......  நெற்றியில் வைத்திருந்த குங்குமம் அவள் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்க்க..... நெற்றியில் பூத்த வியர்வையின் மேல் காதோரம் அவள் ஒதுக்கி வைத்திருந்த முடிக்கற்றை வந்து விழுக....அதனை தன் புறங்கையால் ஒதுக்கி விட்ட படி அவள் கோலத்தினை  மும்மரமாக போட்டுக்கொண்டிருந்தாள்.

        கதிருக்கு பொதுவாகவே கோலம் போடும் பெண்களை மிகவும் பிடிக்கும். தன் வீட்டின் முன் கோலம் இருப்பது அவனுக்கு ஒரு நிறைவை கொடுக்கும். சிறுவயதில் தன் அன்னை கோலமிடும் பொழுது அருகில் இருந்து அந்த கோலத்தினை உற்று உற்றுப் பார்த்து சந்தோஷப்படுவான். தன் வீட்டு வாசலுக்கு அழகு சேர்ப்பது கோலம் என்பது அவன் மனதில் பதிந்த போன ஒன்று.

      வெகு நாட்கள் கழித்து தன் வாசலில் அதுவும் தன் தேவதையே தனக்கு பிடித்தமான செயலை செய்யும்பொழுது  அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன் அன்னை கோலமிடும் பொழுது கோலத்தின் அழகை ரசித்தவன். இன்று தன் தேவதை கோலமிடும் பொழுது தேவதையின் அழகிலே லயித்திருந்தான்.

       கதவில் தலை வைத்து சாய்ந்து மனதில் நிம்மதி பரவ...... அவள் கோலம் போடும் அழகினை கைகட்டி பார்த்து கொண்டிருந்தவனை அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.

     ட்ரஸ் மாத்திட்டிங்களா கதிர்.

  அவன் சிரிப்புடன் ஆம் என்பது போல் தலையசைக்க ....

   அவளும் சிரிப்புடன் குனிந்து கோலத்தினை தொடர்ந்தாள்.

   கோலமெல்லாம் உங்களுக்கு போட தெரியுமா என்று அவன் வினவ....

   ம்ம்... தெரியும் கதிர்.ஆனா எங்க அம்மா என்னை கோலம் போட விட்டதே இல்லை. வாசல்ல போடுறது.  இதுதான் ஃபர்ஸ்ட் டைம். நல்லா இருக்கா கதிர்..... என்று அவள் கோலத்தினை முடித்துவிட்டு எந்திரிக்க.....

     நல்லாயிருக்காவா..... வேற லெவல். செம்மையா இருக்கு தர்ஷினி.

    ம்ம்.. நம்பிட்டேன் என்று அவள் அவனை சந்தேகமாக பார்த்துக் கூற,

    ஏங்க உண்மையாதாங்க. நான் சொன்னா நம்ப மாட்டிங்களா.....

     அவள் அமோதிப்பாக தலையாட்டினாள்.

      சரி கதிர் பால் வாங்கிட்டுவறீங்களா....

வீட்ல உள்ளவங்களுக்கு டீ-யா.... காஃபி-யா.....

26 comments

  • Thank u so so much sir. Na avlo periya writer lam ela sir. Na oru kathukutty na elutha arambichu two years tha aguthu sir. Ungaludaya anupavam vaintha eluthuku munadi na elam onume ela sir. Neenga enoda story virumbi padipathu happy sir.
  • Good morning, dear Dhanu! எனக்கு முன்பே 421 பேர் படிச்சிட்டாங்களேன்னு கோபமாக, படித்தேன், ரொமாண்டிக் பகுதி என்னை சமாதானப்படுத்தியது. சினிமாவிலே வருகிறமாதிரி, யதார்த்தமாக இருந்தது! கதை குடும்பப்ஆங்காக மாறுகிறது! வெளுத்து வாங்குங்க!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.