(Reading time: 11 - 21 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

உண்மையிலேயே இந்த வீட்டிற்கு வந்த மஹாலக்ஷ்மியாகவே அவளை மனதில் இருத்திக் கொண்டான்.

       கதிர் இவங்கல்லாம் எப்ப எந்திரிப்பாங்க.... என்று அவன் காதில் அவள் குசுகுசுவென்று பேச....

       அவள் பேச்சில் தன்னிலை பெற்றவன். இதோ இப்ப எந்திரிச்சிருவாங்க தர்ஷீ..... ஓ அப்ப சரி நான் போய் டீ - போட்டுட்டு வரேன்.

     அவன் சரி என்பது போல் தலையை ஆட்டி வைத்தான்.

      வாசலிலே கோலத்தை பார்த்து ஆச்சரியமானவர். வீட்டின் உள்ளே சாம்பிராணி புகை வரவும், இன்னக்கி விசேஷம் தான் போலிருக்கு என்று எண்ணிய படி வீட்டினுள் நுழைந்தார்.

      ஆனால் அனைவரும் அதே நிலையில் உறங்கிக் கொண்டிருக்க.....கிச்சனில் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.

      யார் என்று அவர் எட்டி பார்க்க.... அங்கு தர்ஷினி டீ போட்டபடியே அருகிலுள்ள பாத்திரங்களையும் இடத்தையும் சுத்தப்படுத்தி கொண்டிருந்தாள்.

        அந்த வயதான மனிதருக்கு ஏனென்று தெரியாமல் ஒரு சிறு நிம்மதி மனதில் பரவிற்று.

        பாத்திரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு திரும்பியவள் அங்கு அவள் மாமனார் நிற்பதை பார்த்து,

     சிரித்த முகமாக வாங்கப்பா.... உங்களுக்கு டீ-ல சக்கரை கம்மியா போடணுமா..... ஜாஸ்தி போடணுமா என்று அவள் பேச்சு கொடுக்க.....

      அவரும் சிரித்த முகமாக கம்மியாவே போடும்மா என்று கூறினார்.

      சரிப்பா..... என்று டீ-யை கலந்தவள் அவரிடம் நீட்ட,

      நன்றிம்மா என்று கூறி அவர் வாங்கி கொண்டு திண்ணையில் அமர்ந்தார்.

      அப்பொழுதுதான் கமலாக்கு லேசாக விழிப்பு தட்ட,  கண்களை திறந்தவர். வீடு முழுக்க சாம்பிராணி புகை இருக்கவும் அடித்துப் பிடித்து எழுந்திறித்தார்.

     தலைமுடியை ஒதுக்கி கொண்டை போட்டுக் கொண்டே வாசலை நோக்கி வந்தவள். அங்கு அவள் கணவனை கண்டு,

      என்னைய்யா வழக்கம் போல இன்னைக்கும் உனக்கு மட்டும் டீ வாங்கிட்டு வந்துட்டியா என்று கேட்க....

      அவர் டீ-யை பருகியபடியே கிச்சனை கைகாட்ட....

       அங்கு என்ன இருக்கு என்று கேட்டுக்கொண்டே கிச்சனை எட்டி பார்க்க.....

      எப்பொழுதும் அவர்கள் சமையலறை காய்கறிகள் சிதர.......இரவில் சாப்பிட்ட உணவு

26 comments

  • Thank u so so much sir. Na avlo periya writer lam ela sir. Na oru kathukutty na elutha arambichu two years tha aguthu sir. Ungaludaya anupavam vaintha eluthuku munadi na elam onume ela sir. Neenga enoda story virumbi padipathu happy sir.
  • Good morning, dear Dhanu! எனக்கு முன்பே 421 பேர் படிச்சிட்டாங்களேன்னு கோபமாக, படித்தேன், ரொமாண்டிக் பகுதி என்னை சமாதானப்படுத்தியது. சினிமாவிலே வருகிறமாதிரி, யதார்த்தமாக இருந்தது! கதை குடும்பப்ஆங்காக மாறுகிறது! வெளுத்து வாங்குங்க!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.