அது ஊற்றெடுக்கும் இடத்திலிருந்து...
அது கடல் கலக்கும் இடம் வரை!
நானும் நீயும் நிதானமாய்ப்
பயணிப்போம் ஒற்றைப் படகில்...
வெறும் பார்வையை மட்டும்
பகிர்ந்து கொண்டு!”
“ஆஹா...ஆஹா...பிண்றீங்களே...” என்ற ரவீந்தர்,“ஆமாம்...சங்கொலி பத்திரிக்கைல...நாச்சியார் எழுதற கவிதைகளெல்லாம்... சைவ கவிதைகளாய்...சமூக அவலங்களைச் சாடும் கவிதைகளாய் இருக்கும்...ஆனா இன்னிக்கு நாச்சியார் பயங்கர ரொமான்ஸ் கவிதையல்ல எழுதியிருக்காங்க?...என்னாச்சு?” கேட்டான்.
“தெரியலை...என் மனசு எதையோ சொல்லுது...என் பேனா அதுவா எழுதுது...அவ்வளவுதான்” என்ற கோகிலா, “ஆமாம்...இன்னிக்கு லீவுதானே?...என்ன புரோக்ராம்?” கேட்டாள்.
“வந்து....நண்பர் ஒருத்தர் வர்றேன்னு சொல்லியிருக்கார்...அவரோட சில டிஸ்கஷன்ஸ் இருக்கு”
“ஓ.கே....ஓ.கே...வாங்க...நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணுவோம்!...அதுக்கு முன்னாடி போன் பண்ணினாலும் பண்ணுவேன்” சொல்லி விட்டு கோகிலா இணைப்பிலிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே வேறொரு கால் வந்தது.
“யார் இது?...புது நெம்பராயிருக்கே?” யோசித்தவாறே, காலை அட்டெண்ட் செய்து, “ஹலோ...” என்றான் ரவீந்தர்.
“ஹலோ...நான் காவ்யா”
“ஓ...நீங்களா?...என்ன திடீர்னு கால் பண்ணியிருக்கீங்க?” சிரிப்புடன் கேட்டான்.
“ஏன் பண்ணக் கூடாதா?”
“அதுக்கில்லை...உங்க கிட்ட என்னோட நெம்பர் இருக்காதே?....அதனால் கேட்டேன்” சமாளித்தான் ரவீந்தர்.
“என்ன சார்?...உங்க நெம்பர் கிடைக்காதா?...கோயமுத்தூர் ஆபீஸிலிருந்து வரும் போதே கேட்டு வாங்கிட்டு வந்திட்டேன்” என்றாள் காவ்யா.
“ஓ...ஸ்மார்ட்”
“அது சரி...அந்தப் பேப்பரைப் படிச்சீங்களா?” ஆர்வமாய்க் கேட்டாள் காவ்யா.
“எந்தப் பேப்பர் மேடம்?...தினத்தந்தியா?...தினமலரா?” சாதாரணமாய்க் கேட்டான் ரவீந்தர்.
“அடக் கடவுளே?...கோயமுத்தூர் ஆபீஸிலிருந்து நீங்க புறப்படும் போது நான் குடுத்தனுப்பினேனே?...ஒரு பேப்பர்?...அதைத்தான் படிச்சீங்களா?” கோபமாய்க் கேட்டாள் காவ்யா.