நிமிர்ந்து பார்க்காமலே தேங்க்ஸ் என்றவன் அவளது கையில் இருந்த தேநீர் கோப்பையை எடுத்த அந்த ஒரு நிமிடம் அவள் முகத்தை பார்த்தான்.
அவள் எப்போது தேநீர் கொடுத்தாலும் அவள் முகத்தைப் பார்க்காமலேயே அவன் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம். அதனால் தைரியமாக எப்பொழுதும் அவன் முகத்தை ரசித்துக் கொண்டு கொடுப்பது ஜனனியின் வழக்கம்.
இன்றும் வழக்கம் போல அவன் முகத்தையே ரசித்துக் கொண்டிருக்க அவன் எதிர்பாராமல் அவள் முகத்தை பார்த்தான். தன்னையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த அவளிடம் ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன என்றான். அவனையே ரசித்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் தன்னை பார்த்து விட்டது தெரிந்ததும் உள்ளுக்குள் உதறல் எடுக்க அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டதும் அவளோ மெய் மறந்து அவனையே பார்த்து நின்றாள்.
அவள் முன் சொடக்கு போட்டு தூக்கமா என்று கேட்கவும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையே பார்த்து கொண்டு நகர்ந்தாள்.
அவள் முகத்தில் வந்து போன ஒவ்வொரு மாற்றத்தையும் ஜனாவின் கண்கள் குறித்து கொண்டது. அவன் உதடுகளிலோ ஒரு வித புன்னகை உறைய தன் வேலையை கவனிக்க தொடங்கினான்.
அவனது அந்த செய்கை ஜனனிக்குள் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது. நடப்பது கனவா நிஜமா என்று புரிந்து கொள்ளவே நேரம் எடுக்க நடந்தது நிஜம் என்று புரிந்ததும் பதின்ம வயதில் தோன்றும் உணர்வுகள் ஜனனிக்குள் தோன்றி அவளுக்குள் புதுவித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்த நேரம் சரியாக வீட்டின் அழைப்பு மணி அழைக்க யாராக இருக்கும் என்ற யோசனையுடன் ஜனனி கதவை திறக்க அவளையறியாமல் அவள் உடம்பில் ஒரு வித பதட்டம் தோன்ற அவன் கண்களில் ஒரு வித வலி பரவ அவள் உதடுகள் ஸ்வேதா என்றது.
கதவு திறந்த சத்தம் கேட்டது. ஆனால் அதன் பிறகு எந்த சத்தமும் வராமல் அமைதியாக இருக்க ஜனா எழுந்து வெளியே வந்தான்.
வலி நிறைந்த விழிகளோடு பதட்டத்தோடு நின்ற ஜனனியை கண்டவனின் கால்கள் விரைவாக வாசலை நோக்கி செல்ல ஜனனியை தாண்டி அழகு சிலையாக செதுக்கிய சிற்பமாக நின்ற ஸ்வேதா கண்களில் பட்டாள்.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.