“இ...இல்லை சார்!...வெளிய அந்த வாட்ச்மேன் பாடி கிடந்த இடத்தோட வந்துட்டேன் சார்!”
“சரி...கிளம்பு!”
“எங்க சார்?” கான்ஸ்டபிளின் குரலில் முகாரி ராகம் வந்தது.
“ம்ம்ம் நான் இப்ப அந்தக் காம்ப்ளக்ஸுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன்!...நீயும் என் கூட வா!”
“நா...னா?.... சா...ர்?”
“ம்...நீயேதான்!..” என்று எங்கோ பார்த்துச் சொன்னவர் “விருட்” டென்று திரும்பி அந்தக் கான்ஸ்டபிள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து “அட உன்னைத்தான்யா...வாய்யா!” என்றபடி வேக வேகமாய் நடக்க
வியர்த்துப் போய் அவர் பின்னாலேயே ஓடினார் கான்ஸ்டபிள்.
****
“விஸ்வா டவர்ஸ்” முன் ஏ.சி.தீனதயாளின் கார் நின்றதும அதிலிருந்து இறங்கிய ஏ.சி. அங்கு கும்பலாய் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து புருவம் நெரித்து
“இவங்கெல்லாம் யாரு?...எதுக்கு இங்க வந்து காத்திட்டிருக்காங்க?” உடன் வந்த கான்ஸ்டபிளிடம் கேட்டார்.
அந்தக் காண்ஸ்டபிள் ஓடிப் போய் விபரம் சேகரித்துக் கொண்டு வந்தார். “சார்...செக்யூரிட்டி வேலைக்கு இண்டர்வியூ நடக்குதாம் சார்!”
“பரவாயில்லையே...இந்தக் காம்ப்ளக்ஸ் பில்டிங்ல இதுக்கு முன்னாடி வேலை பார்த்த ரெண்டு செக்யூரிட்டிக மர்மமான முறைல செத்துப் போயிருக்காங்க!...இன்னொரு செக்யூரிட்டி பைத்தியமாயிருக்கான்!...அப்படியிருந்தும் இத்தனை பேர் அந்த வேலைக்கு வந்திருக்காங்கன்னா...ரியலி குட்!” ஆச்சரியப்பட்டார் ஏ.சி.
“சார்!...இவனுகளுக்கெல்லாம் அந்த விவரம் தெரியாது போலிருக்கு!...அதான் வந்திருக்கானுக!...தெரிஞ்சுது...அவ்வளவுதான் துண்டைக் காணோம்...துணியைக் காணோம்ன்னு ஓடியிருப்பானுக!”
“கரெக்ட்!...நீ சொல்றதுதான் கரெக்ட்!” என்று சொன்ன ஏ.சி. அவசர அவசரமாக காம்ப்ளக்ஸின் ஆபீஸ் அறைக்குச் சென்று அங்கு இண்டர்வியூ நடக்கும் அறையின் முன் நின்றார்.
ப்யூன் ஒருவன் அவர் வந்திருப்பதை உள்ளே இண்டர்வியூ செய்து கொண்டிருந்த