ரொம்ப தைரியசாலி...ஆக்சுவலா அவன் ஒரு அட்வென்ச்சர் விரும்பி!...அதனால நிச்சயமா அவன் இந்த சேலஞ்சிங் வேலையை ஏத்துக்குவான்!”
“அப்படின்னா...உடனே வரச் சொல்லுங்க சார்!...ஏற்கனவே ரெண்டு நாளா காம்ப்ளக்ஸ் வாட்ச்மேனே இல்லாமக் கெடக்கு!...இருந்த பக்கத்து பில்டிங் செக்யூரிட்டியும் நேத்திக்கு அவுட்டாயிட்டான்!...இந்த ஏரியாவே இப்ப காவல் இல்லாமக் கெடக்கு!..திருட்டுப் பயலுகளுக்கு விஷயம் தெரிஞ்சு அவனுக கை வரிசையை காட்டும் முன் நாம வாட்ச்மேனை அப்பாயிண்ட் பண்ணிடறது நல்லது சார்!” சாம்பசிவத்தின் குரலில் கவலை தெரிந்தது.
“ ஓ.கே!...ஓ.கே!...ஐ அன்டர்ஸ்டாண்ட் யுவர் பிராப்ளம்!...அந்தப் பையனை முடிஞ்சா இன்னிக்கே வரச் சொல்லிடறேன்!...பை...த..பை....நைட் பேட்ரோல்கிட்ட சொல்லி இந்த ஏரியாவை கொஞ்ச நாளைக்கு ஸ்ட்ரிக்டாவே வாட்ச் பண்ணச் சொல்றேன்!...போதுமா?”
சாம்பசிவம் அரை மனதுடன் தலையாட்ட
ஏ.சி.தன் காரை நோக்கி நடந்தார்.
கார் புறப்பட்டு ஓட ஆரம்பித்ததும் கான்ஸ்டபிளிடம் கேட்டார், “என்னய்யா...என்ன நினைக்கறே?...இது அமானுஷ்யமா?...இல்லை எவனாச்சும் பின்னாடி இருந்து வேலை பாக்கறானுகளா?”
“இல்லை சார்...இது சந்தேகமே இல்லாம அமானுஷ்யம்தான்!...”
வாய் விட்டுச் சிரித்த ஏ.சி.தீனதயாள் “கவலைப்படாதய்யா...இன்னும் ரெண்டே நாள்ல தெரிஞ்சிடும்!...இது பேய் வேலையா?...இல்லை மனுஷ வேலையா?ன்னு!”
“எப்படி சார்?”
“ம்...இங்க செக்யூரிட்டி வேலைக்காக நான் அனுப்பப் போற ஆள் சாதாரண ஆள் இல்லை!...பயங்கர பிரில்லியண்ட்!...அதே நேரம் எதற்கும் அஞ்சாதவன்!...விஞ்ஞானத்தையும்...அமானுஷ்யத்தையும் மிக்ஸ் பண்ணி வெளையாடுவான்!...அவன் வந்து பார்த்ததுமே சொல்லிடுவான் பாரு!”
“ஓ...வரட்டும்...வரட்டும்...அப்படி ஒரு ஆள்தான் சார் வேணும்!”
தொடரும்...
Next episode will be published on 23rd Feb. This series is updated weekly on Tuesdays.