“நண்பர்கள் ரெண்டு பேரும் எதையோ சீரியஸா பேசிட்டு இருந்தீங்க போலிருக்கு...நான் தொந்தரவு பண்ணிட்டேன்” என்று கஸ்தூரி அய்யா சொல்ல,
“சேச்சே....அப்படியெல்லாம் எதுவும் இல்லை!...சும்மா பழைய கதைகளைத்தான் பேசிட்டிருந்தோம்” பொய் சொன்னான் ரவீந்தர்.
“அப்படின்னா சரி” என்ற கஸ்தூரி அய்யா ரவீந்தர் பக்கம் திரும்பி, “தம்பி ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?” கேட்டார்.
“அது...வந்து...” என்று இழுத்தவன், “தொழில்ல ஒரு நல்ல பொசிஸனுக்கு வரணும்...என்கிற ஆர்வத்துல...ஓடி...ஓடி...உழைச்சிட்டிருந்ததுல..அப்படி ஒண்ணையே மறந்திட்டேன்” என்றான்.
“காலா காலத்துல கல்யாணம் பண்ணிக்கங்க தம்பி...அப்பத்தான் வாழ்க்கை ஒரு நேர் கோட்டுல ஓடும்...இல்லேன்னா...தாறுமாறாயிடும்” என்றார் கஸ்தூரி அய்யா.
“இந்த வருஷம் பண்ணிடலாம்!னு இருக்கேன்!...அம்மாவும் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்காங்க” என்றான்.
“அப்புறம்...ஒரு சின்ன வேண்டுகோள்!...”என்றவர் சுதாகர்ஜியை ஒரு பார்வை பார்த்து விட்டு, “தம்பிக்கு என் பொண்ணோட கதை தெரியும்!னு நினைக்கறேன்” என்றார்.
“ம்..நான் சொல்லியிருக்கேன்” என்றார் சுதாகர்ஜி.
“தம்பி...எனக்கும் வயசாயிட்டே போகுது...என்னிக்கு படுக்கைல விழுந்து பாடைக்குப் போகப் போறேனோ தெரியலை!...அதனால....” என்று சொல்லி நிறுத்தியவரைக் கூர்ந்து பார்த்தான் ரவீந்தர்.
“அதனால...நீங்கதான் தம்பி என் பொண்ணு கிட்ட நாசுக்கா எடுத்துச் சொல்லி...அவளை மறுமணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்!...இவளைப் பற்றித் தெரிஞ்சும் இவளைக் கட்டிக்க ரெண்டு மூணு மாப்பிள்ளைகள் தயாராயிருக்கங்க!...இவதான் அந்தப் பேச்சை எடுத்தாலே எரிஞ்சு விழறா” என்றார் பரிதாபமாய்.
சில நிமிடங்கள் அமைதியாயிருந்த ரவீந்தர், “சரிங்க அய்யா...நான் பேசறேன்” என்றான் கரகரத்த குரலில்.
“சரி தம்பி...நீங்க பேசிட்டு இருங்க...எனக்குக் கொஞ்சம் வெளிய வேலை இருக்கு...போயிட்டு வந்திடறேன்” என்று சொல்லி விட்டு அவர் வெளியேறியதும், சுதாகர்ஜி சொன்னார், “எங்கே என் மகளுக்கு நீங்கதான் தம்பி வாழ்வு குடுக்கணும்!..”னு உன் கிட்டக் கேட்டுடுவாரோ?ன்னு பயந்தேன்!...நல்ல வேளை கேட்கலை” என்றார்.
“கேட்டாலும் அதில் தப்பில்லை!...ஒரு தந்தையா அவர் கடமை அது!..ஆசை ஆசையா மகளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சார்!...அந்த வாழ்க்கை புஸ்வானம் ஆயிடுச்சு!...அதுக்காக